பாஜக உத்தரவால் ராஜ்யசபாவை முடக்கிய அதிமுக.... குலாம்நபி ஆசாத் பாய்ச்சல்
டெல்லி: ப.சிதம்பரம் விவகாரத்தை முன்வைத்து ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் உத்தரவால்தான் ராஜ்யசபாவை அதிமுக எம்.பி.க்கள் முடக்கியதாக மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் சாடியுள்ளார். முன்னதாக ராஜ்யசபா துணைத் தலைவரான பிஜே குரியனும் அதிமுகவின் பொறுப்பற்று நடந்து கொள்வதாகவும் ஜனநாயகத்தை படுகொலை செய்வதாகவும் அதிமுக எம்.பி.க்களைப் பார்த்து சீறியிருந்தார்.
நாடாளுமன்றத்தில் சமீபகாலங்களாக தமிழக பிரச்சனைகளுக்காக மல்லுக்கட்டாத அதிமுக இன்று திடீரென ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யக் கோரி தொடர்ச்சியான அமளியில் ஈடுபட்டது. இதனால் ஒட்டுமொத்தமாக நாடாளுமன்றத்தின் இருசபைகளுமே முடங்கிப் போனது.

மத்திய பாஜக அரசுடன் இணக்கமாக இருக்கக் கூடிய அதிமுக, திடீரென நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியதாவது:
மத்திய அமைச்சர் மற்று தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் அவதூறு பேச்சுகளை பேசுவது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டு அது இன்று விவாதிக்கப்பட இருந்தது. ஆனால் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இவ்விவகாரத்தை விவாதிக்க விடாமல் அதிமுக எம்.பிக்கள் தொடர்ச்சியாக வேண்டுமென்றே அமளியில் ஈடுபட்டனர். இதற்கு முன்னர் அதிமுக எம்.பி.க்கள் இப்படி நடந்து கொண்டதே கிடையாது.
ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் உத்தரவின் பேரில்தான் அதிமுக எம்.பி.க்கள் திட்டமிட்டு இப்படி நடந்து கொண்டனர்.
இவ்வாறு குலாம்நபி ஆசாத் கூறினார்.
ஜனநாயகப் படுகொலை
முன்னதாக ராஜ்யசபாவை நடத்திய துணைத் தலைவர் குரியன் (காங்கிரஸ்), அதிமுக எம்பிக்களின் நடவடிக்கை மிக மோசமானது; பொறுப்பற்ற செயல். சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம்தான் கோரிக்கை விடுக்க வேண்டுமே தவிர சபை நடவடிக்கைகளை முடக்குவது என்பது எப்படி சரியாகும்? இது ஜனநாயகப் படுகொலை என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications