மாணவர் விடுதிக்குள் இழுத்துச் சென்று 10 பேரால் மானப்பங்கப்படுத்தப்பட்ட பல்கலை. மாணவி

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவரை மாணவர்கள் தங்கும் விடுதிக்குள் இழுத்துச் சென்ற 10 மாணவர்கள் அவரை மானபங்கப்படுத்தியுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பிரபல விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலியல் புகார் கொடுத்தார். இந்த சம்பவம் பற்றி வெளியே கூறாமல் இருக்க பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தனக்கு பணம் கொடுக்க முயன்றதாக மாணவியின் தந்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.

ஜாதவ்பூர் பல்லைக்கழகத்தில் ஆர்ட்ஸ் படிக்கும் மாணவர்கள் 10 பேர் சேர்ந்து ஒரு மாணவியை மாணவர்கள் தங்கும் விடுதிக்குள் தர தரவென இழுத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அவர்கள் மாணவியை மானபங்கப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து அந்த மாணவி இது துறித்து பல்கலைக்கழக நிர்வாகிகள் மற்றும் போலீசில் புகார் தெரிவித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+