என்னது ஆளுநரிடம் ஹைதராபாத் நிர்வாகமா? மத்திய அரசுக்கு டி.ஆர்.எஸ். வார்னிங்!!
ஹைதராபாத்: ஹைதராபாத் நகரிடம் சட்டம் ஒழுங்கை ஆளுநரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிடாவிட்டால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் போராட்டத்தை மத்திய அரசு எதிர்கொள்ள நேரிடும் என்று அக்கட்சி எச்சரித்துள்ளது.
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்குவதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று முன் தினம் ஒப்புதல் அளித்தது. தற்போது இந்த மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவரது ஒப்புதலுக்கு பின்னர், ஆந்திர சட்டசபையின் பரிசீலனைக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்படும்.

ஆந்திர சட்டசபையில் மசோதா நிறைவேற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சம்பிராதயத்துக்காக ஆந்திர சட்டசபைக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி கையெழுத்திட்ட பின்னர் தெலுங்கானா தனி மாநிலம் அதிகாரப்பூர்வமாக செயல்பட துவங்கும்.
இதற்கு கால அவகாசம் தேவை என்பதால் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்க இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதற்கிடையில் தெலங்கானாவுக்கும், சீமாந்திராவுக்கும் பொது தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ள ஹைதராபாத் நகரின் சட்டம்-ஒழுங்கு உள்பட அனைத்தும் ஆளுநரின் அதிகாரத்துக்கு கீழ் கொண்டு வரப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் மாநில அமைச்சரவையின் வழிகாட்டுதலை ஆளுநர் ஏற்க வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவர் கே.சந்திரசேகர ராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டதாகும். இதனை ஆளுநர் கையில் ஒப்படைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. தெலுங்கானா அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுவதை ஏற்க முடியாது. இது தொடர்பாக தெலங்கானா மசோதாவில் உரிய திருத்தம் செய்ய வேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications