என்னது ஆளுநரிடம் ஹைதராபாத் நிர்வாகமா? மத்திய அரசுக்கு டி.ஆர்.எஸ். வார்னிங்!!
ஹைதராபாத்: ஹைதராபாத் நகரிடம் சட்டம் ஒழுங்கை ஆளுநரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிடாவிட்டால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் போராட்டத்தை மத்திய அரசு எதிர்கொள்ள நேரிடும் என்று அக்கட்சி எச்சரித்துள்ளது.
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்குவதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று முன் தினம் ஒப்புதல் அளித்தது. தற்போது இந்த மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவரது ஒப்புதலுக்கு பின்னர், ஆந்திர சட்டசபையின் பரிசீலனைக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்படும்.

ஆந்திர சட்டசபையில் மசோதா நிறைவேற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சம்பிராதயத்துக்காக ஆந்திர சட்டசபைக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி கையெழுத்திட்ட பின்னர் தெலுங்கானா தனி மாநிலம் அதிகாரப்பூர்வமாக செயல்பட துவங்கும்.
இதற்கு கால அவகாசம் தேவை என்பதால் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்க இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதற்கிடையில் தெலங்கானாவுக்கும், சீமாந்திராவுக்கும் பொது தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ள ஹைதராபாத் நகரின் சட்டம்-ஒழுங்கு உள்பட அனைத்தும் ஆளுநரின் அதிகாரத்துக்கு கீழ் கொண்டு வரப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் மாநில அமைச்சரவையின் வழிகாட்டுதலை ஆளுநர் ஏற்க வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவர் கே.சந்திரசேகர ராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டதாகும். இதனை ஆளுநர் கையில் ஒப்படைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. தெலுங்கானா அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுவதை ஏற்க முடியாது. இது தொடர்பாக தெலங்கானா மசோதாவில் உரிய திருத்தம் செய்ய வேண்டும் என்றார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications