பல்லெல்லாம் கொட்டி பாட்டியான ஆடு - 15வது பிரசவத்தில் 5 குட்டி போட்டு சாதனை!

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடகாவில் வயதான ஆடு ஒன்று 15 வது பிரசவத்தில் 5 குட்டி ஆடுகளை ஈன்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தங்கவயல் ஊரக புறநகரில் உள்ள ராஜேஷ்கேம்ப் பகுதியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் விஜய மாணிக்கம்.

இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகள் வளர்த்து விவசாயம் செய்து வரு்கிறார். அவரது வீட்டில் வளர்க்கும் ஆட்டுக்கு 20 வயதாகிறது. ஒவ்வொரு பிரசவத்திலும் இந்த ஆடு ஐந்து குட்டிகளை போடுகிறது.

Goat delivers lamb in Karnataka

15வது முறையாக:

இந்த ஆடு நேற்று முன்தினம் இரவு 15 ஆவது முறையாக பிரசவித்து ஐந்து குட்டிகளை ஈன்றுள்ளது. அதில் ஒரு குட்டி இறந்து போனாலும் மற்ற நான்கு குட்டிகளும் ஆரோக்கியமாக உள்ளன.

பல் விழுந்த பாட்டி:

வயதான காரணத்தால் இந்த ஆட்டிற்கு பல் அனைத்தும் விழுந்துள்ளது. தீவனம்கூட சரியாக எடுத்து கொள்ளாத நிலையில் பொக்கை வாயாலேயே இலை, தழை, தவிடு போன்ற மிருதுவான தீனியை மென்று தின்று சமாளிக்கிறது.

இன்னும் 2 தடவையா?!:

இது இன்னும் இரண்டு முறை கர்ப்பம் தறித்து குட்டி போடும் என்ற நம்பிக்கை உள்ளதாக அதன் உரிமையாளர் விஜயமாணிக்கம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

லாபம் தரும் ஆடு:

மேலும், அதிகளவில் குட்டிகளை ஈனும் இந்த ஆட்டின் காரணமாக ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையை லாபமாக பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+