வேலி தாண்டிய வெள்ளாடு கைது
ராய்ப்பூர்: நீதிபதி வீட்டுக்குள் நுழைந்து, புல், காய்கறிகளை மேய்ந்த 'குற்றத்திற்காக' ஆடு ஒன்றை போலீசார் கைது செய்த சம்பவம் சட்டீஸ்கரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரிலிருந்து சுமார் 350 கி.மீ தொலைவிலுள்ளது கொரியா என்ற கிராமம். இக்கிராமத்திலுள்ள ஹேமந்த் ரத்ரே என்ற, மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் வீட்டுக்குள் அப்துல் ஹாசன் என்பவர் வளர்க்கும் ஆடு அவ்வப்போது சென்று, புற்களையும், காய்கறிகளையும் மேய்ந்து வந்துள்ளது.
Goat detained in police station in Chattisgarh for grazing in a judge's house despite warnings to the goat owner. pic.twitter.com/oj9tj7QbIu
— ANI (@ANI_news) February 9, 2016
வீட்டு காவலாளி பலமுறை எச்சரித்தும், ஆட்டை கட்டுப்படுத்தாமல், மேய விட்டுள்ளார் அப்துல் ஹசன். கோபமடைந்த காவலாளி, போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, போலீசார், அந்த ஆட்டை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். உரிமையாளர் அப்துல் ஹசனும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
காவல் நிலையத்தில் அந்த ஆட்டை போலீசார் கட்டிப்போட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications