மும்பை விமான நிலையத்தில் 7 கிலோ தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது
மும்பை விமான நிலையத்தில் 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மும்பை: மும்பை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள 7. கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் ரூ7.50 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகளை சோதனையிட்டனர். அப்போது, பயணி ஒருவரிடமிருந்து 7.378 கிலே தங்கம் மற்றும் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுக்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் (ரூ. 1,99,99,692) இருக்கும் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் பணத்தைக் கொண்டு வந்த நபரை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications