தெலுங்கானா வரைவு மசோதா குறித்து மத்திய அமைச்சரவை இன்று ஆலோசனை

ஆந்திரத்தைப் பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து தெலுங்கானாவின் எல்லை, சொத்துப் பகிர்வு, தண்ணீர்ப் பங்கீடு போன்றவை குறித்துப் பரிந்துரைக்கும் வரைவு மசோதாவை தயாரிப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழுவை அரசு நியமித்தது.
இந்தக் குழுவில் அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோனி, எம்.வீரப்ப மொய்லி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இக் குழு கடந்த ஒரு மாத காலமாக பல முறை கூடி தெலங்கானா மாநிலம் குறித்த வரைவு மசோதாவை தயாரித்தது. மேலும் ஆந்திரத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தியது.
ராயல தெலுங்கானா
இந்நிலையில் சீமாந்திராப் பகுதியில் உள்ள அனந்தப்பூர், கர்னூல் ஆகிய மாவட்டங்களை தெலுங்கானாவில் சேர்ப்பது குறித்தும், புதிய மாநிலத்துக்கு ராயல தெலுங்கானா எனப் பெயர் சூட்டுவது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டது.
கடும் எதிர்ப்பு
இதற்கு ஆந்திரத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அமைச்சர்கள் குழு நேற்று இரவு தெலுங்கானா வரைவு மசோதாவை இறுதி செய்தது.
ஷிண்டே உறுதி
இது குறித்து சுஷில் குமார் ஷிண்டே செய்தியாளர்களிடம் கூறுகையில், தெலுங்கானா பற்றிய வரைவு மசோதாவை இறுதி செய்துவிட்டோம். இந்த மசோதா குறித்து மத்திய அமைச்சரவை ஆலோசனை நடத்த இருக்கிறது என்றார்.
ராயல தெலுங்கானாதான் இறுதி
அமைச்சர்கள் குழு தயாரித்த வரைவு மசோதாவில், தெலுங்கானாவில் சீமாந்திரா பகுதியில் உள்ள அனந்தப்பூர், கர்னூல் ஆகிய மாவட்டங்களைச் சேர்த்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த இரு மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் அதிக அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இரு மாநிலங்களுக்கும் சம பகிர்வு
வரைவு மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், தெலுங்கானா-ஆந்திரம் ஆகிய மாநிலங்களுக்கு தலா 21 மக்களவைத் தொகுதிகளும், 147 சட்டப்பேரவைத் தொகுதிகளும், 45 மேலவை இடங்களும் சரிசமமாக பகிர்ந்தளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications