பாதுகாப்பான ரயில் பயணத்தை உறுதி செய்வது பெரும் சவால்... புதிய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா
டெல்லி: ரயில்வே துறையில் பல சவால்கள் காத்திருப்பதாகவும், ஆனபோதும் பாதுகாப்பான ரயில் பயணங்களை நிச்சயமாக்குவதே தனது முக்கியப் பணி எனத் தெரிவித்துள்ளார் ரயில்வே துறையின் புதிய அமைச்சராக பதவியேற்றுள்ள சதானந்த கவுடா.
நேற்று டெல்லியில் இருந்து கோரக்பூர் செல்லும் கோரக்தாம் எக்ஸ்பிரஸ் ரயில், உத்தரபிரதேச மாநிலம் சான்ட் கபிர் நகர் ரயில் நிலையத்தின் அருகே அதே டிராக்கில் எதிரே வந்த சரக்கு ரயில் மீது மோதியது.
இதில், பயணிகள் ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டன. இதில், சுமார் 40 பேர் பலியானார்கள், 100க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே, நேற்று மாலை இந்தியாவின் 15 வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார், மற்ற அமைச்சர்களுக்கான இலாக்காக்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இதில் ரயில்வே துறை அமைச்சராக சதானந்த கவுடா நியமிக்கப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் சதானந்த கவுடா. அப்போது அவர் கூறியதாவது :-
ரயில்வே துறையின் முன் பல்வேறு சவால்கள் உள்ளன.அதை ஆராய்ந்துவிட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பாதுகாப்பு,வளர்ச்சி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்று சதானந்த கவுடா தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பாக விரைவில் பிரதமருடன் கலந்தாலோசிக்க உள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.
அதேபோல், தனக்கு ஒரு பத்து நாள் அவகாசம் தந்தால் இது தொடர்பாக மக்கள் முன் விளக்கமாகக் கூறுவேன் எனக் கூறிய சதானந்தா, புல்லட் ரயில் குறித்தான கேள்விக்கு, அது ஏற்கனவே பிரதமரின் தேர்தல் பிரச்சாரத்தில் வலியுறுத்தப் பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications