டெல்லியில் அருண் ஜேட்லியுடன் கோத்தபய ராஜபக்ச சந்திப்பு
டெல்லி: மத்தியில் மோடி தலைமையில் புதிய அரசு பதவியேற்ற பின்னர் இந்தியாவுக்கு முதன் முறையாக வந்த இலங்கை பாதுகாப்புத் துறை செயலர் கோத்தபாய ராஜபக்சே, டெல்லியில் பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லியை நேற்று சந்தித்துப் பேசினார்.

மத்திய பாதுகாப்புத்துறைச் செயலர் ஆர்.கே.மத்தூர் அண்மையில் இலங்கை சென்று வந்தார். அங்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே மற்றும் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்தார். அப்போது இருநாட்டு ராணுவத்தை வலுப்படுத்துவது மற்றும் இருநாட்டு ஒற்றுமைக்கான புதிய வழிகளை உருவாக்குவது குறித்து இருவரும் விவாதித்தனர்.
மத்தூர் இலங்கை சென்று வந்து 10 நாட்களுக்குள்ளாகவே கோத்தபய ராஜபக்ச இந்தியாவுக்கு வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் நேற்று டெல்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண்ஜேட்லியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு பாதுகாப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications