பணியில் மரணமடைந்த ராணுவ வீரர் குழந்தைகள் கல்வி கட்டணம் முழுவதையும் அரசே செலுத்தும்: மத்திய அரசு
டெல்லி: பணியின்போது மரணமடைந்த, மாயமான, மாற்றுத்திறனாளிகளான, ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான கல்வி தொகைக்கான ரூ.10,000 என்ற உச்சவரம்பை நீக்கியுள்ள மத்திய அரசு, கல்வி கட்டணம் முழுவதையும் செலுத்த முன் வந்துள்ளது.
நிதித்துறை அமைச்சகம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்திய ராணுவ வீரர்கள் பணியின்போது கொல்லப்பட்டாலோ, மாற்றுத்திறனாளியானாலோ, காணாமல் போய்விட்டாலோ அவர்கள் குழந்தைகளுக்கு கல்வி கட்டணமாக மாதத்திற்கு அதிகபட்சம் ரூ.10,000 வழங்கப்பட்டு வந்தது.

இந்த சலுகை தொடரும். ஆனால், ரூ.10,000 என்ற உச்சவரம்பு மட்டும் நீக்கப்படுகிறது. கல்வி உதவித்தொகை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலுவோருக்குதான் பொருந்தும். மிலிட்டரி பள்ளிகள், மத்திய அல்லது மாநில அரசுகள் அங்கீகரித்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவற்றுக்கும், முழுக்க மத்திய அல்லது மாநில அரசுகளின் நிதி உதவியோடு செயல்படும், தன்னாட்சி (autonomous) கல்வி நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு, இதுபோன்ற மாணவ, மாணவிகளுக்கு டியூசன் ஃபீஸ், ஹாஸ்டல் கட்டணம், புத்தக கட்டணம், சீருடை கட்டணம் மற்றும் ஆடைகளுக்கான செலவு அனைத்தும் அரசால் செலுத்தப்பட்டு வந்தது.
ஆனால், 7வது நிதி கமிஷன் அளித்த பரிந்துரையை ஏற்று, செலவீனங்களுக்கான உச்சவரம்பு ரூ.10,000 என நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய கடற்படை தலைமை அட்மிரல் அனில் லன்பா மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதி, பழைய நடைமுறையை அமல்படுத்த கோரிக்கைவிடுத்தார். இந்த நிலையில், நிதி அமைச்சகம் உத்தரவை பிறப்பித்துள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications