பணியில் மரணமடைந்த ராணுவ வீரர் குழந்தைகள் கல்வி கட்டணம் முழுவதையும் அரசே செலுத்தும்: மத்திய அரசு
டெல்லி: பணியின்போது மரணமடைந்த, மாயமான, மாற்றுத்திறனாளிகளான, ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான கல்வி தொகைக்கான ரூ.10,000 என்ற உச்சவரம்பை நீக்கியுள்ள மத்திய அரசு, கல்வி கட்டணம் முழுவதையும் செலுத்த முன் வந்துள்ளது.
நிதித்துறை அமைச்சகம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்திய ராணுவ வீரர்கள் பணியின்போது கொல்லப்பட்டாலோ, மாற்றுத்திறனாளியானாலோ, காணாமல் போய்விட்டாலோ அவர்கள் குழந்தைகளுக்கு கல்வி கட்டணமாக மாதத்திற்கு அதிகபட்சம் ரூ.10,000 வழங்கப்பட்டு வந்தது.

இந்த சலுகை தொடரும். ஆனால், ரூ.10,000 என்ற உச்சவரம்பு மட்டும் நீக்கப்படுகிறது. கல்வி உதவித்தொகை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலுவோருக்குதான் பொருந்தும். மிலிட்டரி பள்ளிகள், மத்திய அல்லது மாநில அரசுகள் அங்கீகரித்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவற்றுக்கும், முழுக்க மத்திய அல்லது மாநில அரசுகளின் நிதி உதவியோடு செயல்படும், தன்னாட்சி (autonomous) கல்வி நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு, இதுபோன்ற மாணவ, மாணவிகளுக்கு டியூசன் ஃபீஸ், ஹாஸ்டல் கட்டணம், புத்தக கட்டணம், சீருடை கட்டணம் மற்றும் ஆடைகளுக்கான செலவு அனைத்தும் அரசால் செலுத்தப்பட்டு வந்தது.
ஆனால், 7வது நிதி கமிஷன் அளித்த பரிந்துரையை ஏற்று, செலவீனங்களுக்கான உச்சவரம்பு ரூ.10,000 என நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய கடற்படை தலைமை அட்மிரல் அனில் லன்பா மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதி, பழைய நடைமுறையை அமல்படுத்த கோரிக்கைவிடுத்தார். இந்த நிலையில், நிதி அமைச்சகம் உத்தரவை பிறப்பித்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications