அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம், ஆனா கட்ட மாட்டோம்.. மக்களை குழப்பும் மத்திய அமைச்சர்
லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில்கட்ட அரசு தயாராக இருப்பதாகவும், சுப்ரீம்கோர்ட் உத்தரவு அல்லது பரஸ்பர புரிதல் வர வேண்டும் என்று கலாச்சார மற்றும் சுற்றுலா துறைகளுக்கான மத்திய அமைச்சர் மகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்ற கோரிக்கை இந்து அமைப்புகளிடமிருந்து வலுத்து வருகிறது. இதன் நடுவே, கோவில் கட்ட, குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து அயோத்திக்கு 2 லாரிகளில் கற்கள் வந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா ராமர் கோவில் கட்டப்படும் தினத்தை தெரிவிக்கவேண்டும் என்று கூறிவரும் நிலையில், காங்கிரஸ் கட்சியோ, கோயில் கட்ட வரும் நிதி ஆதாரம் பற்றி விசாரிக்க கேட்டுக்கொண்டுள்ளது.
இதனிடையே மத்திய அமைச்சர் மகேஷ் ஷர்மா கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அரசு உறுதியாக உள்ளது. அயோத்தியில் விரைவில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பது இந்திய மக்களின் கனவாகும்.
எங்களுடைய கட்சியும், அரசும் ஏற்கனவே அவர்களுடைய நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டது. ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம், இருப்பினும் நாங்கள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு அல்லது கோவில் கட்டும் விவகாரத்தில் இரு தரப்பின் பரஸ்பர ஒப்புதலை பெற வேண்டும் என்று காத்திருக்கிறோம்.
இதனால்தான், கோவில் கட்டுவதில் காலம் கடந்து வருகிறது. நாட்டு மக்கள் விரும்பினாலும்கூட, கோர்ட்டில் வழக்கு நிலுவையிலுள்ள நிலையில், ராமர் கோயில் கட்டும் பணியை ஆரம்பிக்க முடியாத நிலையில்தான் மத்திய அரசு உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications