தேவநாகரி எழுத்துருவில் 'டொமைன்'களை பதியும் திட்டத்தை தொடங்குகிறது மத்திய அரசு!
Subscribe to Oneindia Tamil
நொய்டா: ஹிந்தி, மராத்தி உள்ளிட்ட 8 மொழிகளை எழுத உதவும் தேவநாகரி எழுத்துருவில் இணைய தள பெயர்களை (domain name) பதிவு செய்யும் திட்டத்தை மத்திய அரசு தொடங்க உள்ளது.
இது தொடர்பாக நேஷனல் இன்டர்நெட் எக்ஸ்சேஞ்ச் ஆப் இந்தியாவின் முதன்மை செயல் அதிகாரி கோவிந் கூறியதாவது:
நாட்டின் ஆட்சி மொழிகளில் ஹிந்தி, மராத்தி, டோக்ரி உட்பட 8 மொழிகளில் எழுத உ தவுவது தேவநாகரி எழுத்துரு. இந்த தேவநாகரி எழுத்துருவில் டொமைன்களை வரும் 21-ந் தேதி முதல் பயன்படுத்தலாம்.
இந்த டொமைன்களின் பெயர்கள் வழக்கமான .com, .in போல .bharat.in என்று இருக்கும். ஒவ்வொரு டொமைன் பெயருக்கும் ரூ350 கட்டணமாக வசூலிக்கப்படும். சப் டொமைனுக்கு ரூ250 பெறப்படும்.
இதேபோல் தமிழ், பஞ்சாபி, தெலுங்கு உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் டொமைன் பெயர்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு கோவிந்த் கூறினார்.












Click it and Unblock the Notifications