5 ஆண்டுகளில் 597 பாதுகாப்பு படை வீரர்கள் தற்கொலை- மத்திய அரசு தகவல்
டெல்லி: நாட்டின் பாதுகாப்பு படை வீரர்களில் 597 பேர் கடந்த 5 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டனர் என்று ராஜ்யசபாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
ராஜ்யசபாவில் அருண் ஜேட்லி பேசியதாவது:

597 பேர் தற்கொலை
கடந்த 2009 முதல் 2013ம் ஆண்டு வரையில் முப்படையிலும் 597 வீரர்கள் (498 ராணுவ வீரர்கள், 83 விமானபடை வீரர்கள், 16 கடற்படை வீரர்கள்) தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

2010-ல்தான் அதிகம் பேர் தற்கொலை
2010ம் ஆண்டில் மட்டும் அதிகப்படியாக 116 வீரர்கள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். கடந்த 2013ம் ஆண்டியில் இந்த நிலை சற்று குறைந்துள்ளது. 83 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

விலகிய ராணுவத்தினர்..
இந்த காலகட்டத்தில் முப்படையை சேர்ந்த அதிகாரிகள் 1,349 பேர் தங்களது ராணுவத்தில் இருந்து விலகியுள்ளனர். அவர்கள் முன்கூட்டிய ஓய்வு பெற்றுள்ளனர்.

ஓய்வு பெற விரும்பியோர்
2,215 வீரர்கள் முன்கூட்டிய ஓய்வுக்கு கோரிக்கை விடுத்தனர். 1,349 பேருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களுக்கு பொருத்தமான சூழலை உருவாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் மூலம் ராணுவ வீரர்கள் மனஅழுத்தமும் இல்லாமல் தங்கள் கடமைகளை செய்ய முடியும்.

19 விமானங்கள் சேதம்
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்திய விமானப்படைக்கு சொந்தமான 19 விமானங்கள் சேதம் அடைந்துவிட்டன.
இவ்வாறு பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
-
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications