மோசடித் திருமணங்களைத் தடுக்க... மேட்ரிமோனியல் சைட்களில் அடையாளச் சான்றை கட்டாயமாக்கும் மத்திய அரசு!
ஜெய்ப்பூர்: திருமணம் என்ற பெயரில் மோசடிகள் நடைபெறாமல் தடுக்க, இனி இணையத்தள திருமணத்தகவல் மையங்களில் பதிவு செய்வோர், தங்களது அடையாள அட்டையை ஆதாரமாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய வழிமுறையை மத்திய அரசு கொண்டுவரவுள்ளது.
மணமகனையோ அல்லது மணமகளையோ நேரில் பார்க்காமல், உலகத்தின் ஏதோ மூலையில் இருக்கும் அவர்களுடன் திருமணத்தை நடத்தி வைக்கும் வேலையைப் பார்த்து வருகின்றன திருமண தகவல் மைய இணையதளங்கள்.
இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் நடைபெறும் இத்திருமணங்களில் பல பின்னாளில் பெரும் மோசடிகளில் முடிந்த சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. ஏமாற்றுக்காரர்கள் சிலர் இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, தங்களைப் பற்றி தவறான தகவல்களைத் தந்து விடுகின்றனர்.

கேள்விக்குறியாகும் எதிர்காலம்...
இத்தகைய திருமணங்களால் மணமகன் அல்லது மணமகள் என யாராவது ஒரு தரப்பு பெரும் ஏமாற்றத்தைச் சந்திக்கின்றது. இதனால் அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடுகிறது. திருமண உறவுகளும் பாதிக்கப்படுகின்றன.

அடையாள அட்டை கட்டாயம்...
எனவே, அத்தகைய விரும்பத்தகாத சம்பவங்களைத் தடுக்க, இணையதள திருமண தகவல் மையங்களில் பதிவு செய்வோர் இனி அடையாள அட்டைத் தரும் முறையை கட்டாயமாக்குகிறது மத்திய அரசு.

மேனகா காந்தி...
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது இந்தத் தகவலை அவர் தெரிவித்துள்ளார்.

மறுசீரமைப்பு...
விரைவில் இணையதள திருமண தகவல் மையங்களை மறுசீரமைப்பு செய்ய இருப்பதாகவும், அடுத்த மாதத்திற்குள் அதன் பணிகள் முடிவடையும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். இதன் மூலம் மோசடித் திருமணங்கள், ஏமாற்று வேலை போன்றவை தடுக்கப்படும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

ஆதார் அட்டை...
அதன்படி, திருமணத்திற்காக இணையதளத்தில் விண்ணப்பிப்பவர்கள் தங்களது ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை தரலாம். வேறு நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தால் பாஸ்போர்ட்டை அடையாள அட்டையாக சமர்ப்பிக்க வேண்டும்.

சரிபார்ப்பு...
அதில் உள்ள புகைப்படமும், விபரங்களும் உண்மை தானா என சம்பந்தப்பட்ட அலுவலங்களைத் தொடர்பு கொண்டு திருமணத் தகவல் மையம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications