வருமான வரிக் கணக்கு தாக்கலுக்கு எளிமையான புதிய படிவங்கள்... ஆகஸ்டு 31 வரை அவகாசம்!
டெல்லி: வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய எளிமைப் படுத்தப்பட்ட புதிய படிவங்கள் வெளியிடப் பட்டுள்ளன. அதேபோல், வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக, 14 பக்க படிவம் இந்தாண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அதில், வரி செலுத்துவோர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணம், செயல்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகள் போன்ற கூடுதல் தகவல்கள் கேட்கப்பட்டிருந்தது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து அந்த படிவத்தை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார் மத்திய நிதியமைச்சரான அருண் ஜெட்லி. இந்நிலையில், தற்போது 2015-2016-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கலுக்காக, எளிமைப்படுத்தப்பட்ட புதிய படிவங்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.

கால அவகாசம் நீட்டிப்பு...
அத்துடன், கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசமும், ஆகஸ்டு 31-ந்தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐடிஆர்-2 ஏ...
ஐடிஆர்-2ஏ எனப்படும் இந்த எளிமைப்படுத்தப்பட்ட படிவம், வர்த்தகம், தொழில் மூலம் வருமானம் இல்லாத, வெளிநாட்டில் சொத்து இல்லாத தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டு குடும்பத்தினர் தாக்கல் செய்யக்கூடியது.

வங்கிக்கணக்கு விபரம்...
இதில், வரி செலுத்துவோரிடம் பாஸ்போர்ட் இருந்தால், அதன் எண் மட்டும் குறிப்பிட்டால் போதும், அதோடு, அவரது முந்தைய வங்கி சேமிப்பு மற்றும் நடப்பு வங்கிக் கணக்குகளின் விபரம் குறிப்பிட வேண்டும். இதில் செயல்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்கு விபரத்தை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை..

ஐஎப்எஸ்சி கோட்...
அதேபோல், வங்கிக்கிளையின் ஐ.எப்.எஸ்.சி. கோட் நிரப்ப இடம் விடப்பட்டுள்ளது. ‘ரீபண்ட்' எனப்படும் திரும்பப் பெறும் தொகையை எந்த வங்கிக்கணக்கில் பெற்றுக்கொள்வது என்பதையும் வரி செலுத்துவோர் குறிப்பிட வேண்டும்.

ஆதார் எண்...
இது தவிர ‘ஆதார்' எண் மற்றும் இ-மெயில் முகவரியும் கேட்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் கணக்கு தாக்கல் செய்வதை உறுதி செய்வதற்காக இந்த விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன.

ஐடிஆர்-2...
இதேபோல், வர்த்தகம் மற்றும் தொழில் மூலம் வருமானம் பெறும் தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டு குடும்பத்தினருக்காக ஐடிஆர்-2 என்ற படிவம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், வெளிநாட்டில் சொத்து இருந்தாலோ அல்லது வெளிநாட்டில் இருந்து வருமானம் வந்தாலோ அதுபற்றி குறிப்பிட வேண்டும்.

இந்திய குடிமகன் அல்லாதவர்கள்...
ஆனால், இந்திய குடிமகனாக இல்லாமல், தொழில், வேலை மற்றும் படிப்பு நிமித்தமாக இந்தியாவில் தங்கி இருப்பவர்கள், இந்தியாவில் தங்கி இருக்காத முந்தைய ஆண்டுகளில் வெளிநாட்டில் சொத்து வாங்கி இருந்தால், அதுபற்றி தெரிவிப்பது கட்டாயம் இல்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
-
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே?












Click it and Unblock the Notifications