சரமாரியாக 100 கிணறுகளை வெட்டி 20 பெண்கள் செம சாதனை!
கேரளா: கூடை தூக்குவது, கட்டிடம் கட்டுவது போன்ற உடல் உழைப்புமிக்க வேலைகளுக்கு ஆண்களே தயக்கம் காட்டி வரும் நிலையில் கேரளாவில் 20 பேர் கொண்ட மகளிர் குழு ஒன்று 100 க்கும் மேற்பட்ட கிணறுகளை வெட்டி சாதனை படைத்துள்ளது.
மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கலிக்காவு கிராமத்தை சேர்ந்த பெண்கள் தான் இந்த சாதனைக்கு சொந்தகாரர்கள்.

இங்கு உள்ள 20 பெண்கள் ஒன்றாக சேர்ந்து கிணறு வெட்டும் தொழில் ஈடுபட்டு வருகின்றனர். சில சமயங்களில் தண்ணீர் ஊற்றுக்காக அவர்கள் பாறைகளையும் குடைந்து சாதிக்கின்றனர்.
ஒரு கிணறை வெட்ட 20 ஆயிரம் ரூபாய் கூலியாக பெரும் இந்த மகளிர் குழுவினர் ஒரே நாளில் அந்த வேலையை கச்சிதமாக முடித்துவிடுகின்றனர். கடந்த ஒரே ஆண்டில் மட்டும் கலிக்காவு கிராமத்தில் 100 கிணறுகள் வெட்டப்பட்டுள்ளன.
இதன் மூலம் அங்கு நீடித்து வந்த தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மலைப்புரம் மாவட்டத்தில் உள்ள கலிக்காவு கிராமத்தை நாட்டிலேயே வறட்சி இல்லாத கிராமமாக்க வேண்டும் என்பதே இந்த மகளிர் குழுவின் இலக்காக உள்ளது.












Click it and Unblock the Notifications