லோக்சபாவில் நாளை மீண்டும் ஜிஎஸ்டி மசோதா தாக்கல்
டெல்லி: திருத்தப்பட்ட ஜிஎஸ்டி சட்ட மசோதா நாளை மீண்டும் லோக்சபாவில் தாக்கல் செய்யப்படுகிறது. சமீபத்தில்தான் ராஜ்யசபாவில் திருத்தங்களுடன் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
சரக்கு மற்றும் சேவை வரி சட்ட மசோதாவான இந்த ஜிஎஸ்டி மசோதா கடந்த ஆண்டு லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் ராஜ்யசபாவில் அதை நிறைவேற்ற முடியாமல் தவித்து வந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கொடுத்த பரிந்துரயைின்பேரில் சில திருத்ங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த திருத்தங்களுடன் சமீபத்தில் ராஜ்யசபாவில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் இதை மீண்டும் லோக்சபாவில் நிறைவேற்ற வேண்டும். எனவே நாளை மீண்டும் லோக்சபாவில் ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யபப்டவுள்ளது. பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாலும், கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளுமே ஆதரவு தெரிவிப்பதாலும் இந்த மசோதா லோக்சபாவில் எந்த சிக்கலும் இன்று நிறைவேற்றப்படும்.
நாளை இந்த மசோதாவைக் கொண்டு வந்து பின்னர் நடைபெறும் விவாதத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications