இனி ஸ்விக்கி, ஜோமேட்டோவில் உணவு விலை குறையும்.. ஜிஎஸ்டி கவுன்சிலில் நிர்மலா சொல்லும் குட்நியூஸ்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் இன்று ஜிஎஸ்டி கவுன்சிலின் 55வது ஆலோசனை கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டுக்கான பிரிமீயங்கள் மீதான வரி விகிதம் குறைப்பதோடு, ஸ்விக்கி, ஜோமேட்டோவில் ஆர்டர் செய்யும்போது வசூலிக்கப்படும் வரியை குறைக்கவும் வாய்ப்புள்ளது என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பிட்ட கால இடைவெளியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் என்பது நடத்தப்பட்டு வருகிறது. இந்த முக்கிய நோக்கம் என்பது அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி மக்களின் நன்மைக்காக ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றி அமைப்பது தான்.

அந்த வகையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 55வது ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் தான் இன்றைய கூட்டம் தொடர்பான முக்கிய விஷயங்கள் வெளியாகி உள்ளது. அதாவது இன்று நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை கூட்டத்தில் ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டங்களின் மீதான வரியை குறைப்பது பற்றி முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது நம் நாட்டில் மருத்துவ காப்பீட்டு திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் தான் அனைத்து தனிநபர் மருத்துவ காப்பீட்டுக் கொள்கைகளின் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை 5 சதவீதமாகக் குறைக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டில் விலக்கு நீட்டிக்கப்படுவது பற்றியும் ஆலோசித்து இறுதி முடிவு என்பது எட்டபடலாம் என்று சொல்லப்படுகிறது.
அதேபோல் ஸ்விக்கி, ஜோமாட்டோ போன்ற உணவு டெலிவரி தளங்கள் மூலம் உணவு விநியோகம் செய்யப்படுகிறது. இவற்றிற்கு வரி விதிப்பு 18 சதவீதமாக உள்ளது. இதை 5 சதவீதமாக குறைக்கலாமா? என்று விவாதிக்கப்பட உள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஜிஎஸ்டி கட்டணம் குறையலாம்.
மின்சார வாகனங்கள் உள்பட அனைத்து கார்களுக்கான விற்பனை கட்டணத்தை 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்த அதிகாரிகள் குழு பரிந்துரைத்துள்ளது. இதனால் மின்சார வாகனங்களின் விலை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் அழகுசாதனப் பொருட்கள், கடிகாரங்கள், காலணிகள், ஹேண்ட்பேக் போன்ற லைப்ஸ்டைல் பொருட்களின் விலை அடிப்படையில் பொருட்களின் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை உயர்த்துவது பற்றியும் இன்று ஆலோசிக்கப்பட உள்ளது.
இதுதவிர விமானத்திற்கான எரிபொருளை(ஏடிஎப்)ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்தை உருவாக்க வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications