மிகப் பெரிய விஷயமான ஜிஎஸ்டியை மோசமான பாதையில் கொண்டு சென்ற மத்திய அரசு- காங் #FailedGST
மிகப் பெரிய விஷயமான ஜிஎஸ்டியை தவறான பாதையில் கொண்டு சென்றது மத்திய அரசு என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.
மும்பை: மிகப் பெரிய விஷயமான ஜிஎஸ்டியை தவறான பாதைக்கு மத்திய அரசு கொண்டு சென்றது என்று காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரிகள் எனப்படுவது ஜிஎஸ்டி ஆகும். நாடு முழுவதும் ஒரே வரி விதிக்கப்படுவதாகும். இந்த வரிகள் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி அமலுக்கு வந்தது.
இதில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸின் கோரிக்கையை மத்திய அரசு காது கொடுத்து கேட்கவே இல்லை. இந்நிலையில் இந்த வரிகள் அமல்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

ஜிஎஸ்டி அமல்
இதுகுறித்து காங்கிரஸ் தொடர் டுவீட்களில் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில் ஜிஎஸ்டி என்பது பிரதமர் நரேந்திர மோடியின் யூ டர்ன் ஆகும். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. எனினும் ஜிஎஸ்டி உறுதியளித்தப்படி முறைப்படுத்தப்படவில்லை.
|
தோல்விகளில் ஒன்றாகும்
இதனால் பணப்பற்றாக்குறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மளிகை பொருட்களின் விலை குறைய வில்லை என்று 63 சதவீதம் பேர் கூறுகின்றனர். உணவு விடுதிகளில் உணவுகளின் விலை குறைய வில்லை என 57 சதசவீத மக்கள் தெரிவிக்கின்றனர். ஜிஎஸ்டி என்பது பிரதமர் நரேந்திர மோடியின் தோல்விகளில் ஒன்றாகும்.
|
ஜிஎஸ்டி
மிகவும் சிக்கலான வகையில் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியால் பொருளாதாரம் தோல்வியடைந்துவிட்டது. எனினும் மோடி தொடர்ந்து ஜிஎஸ்டி தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் என்று டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து ப.சிதம்பரம் ஒரு கருத்தரங்கில் பேசுகையில், தேவையில்லாதவற்றை பெரிய அளவிலும் (பணமதிப்பிழப்பு), முக்கியமானவற்றை மோசமான நிலையிலும் (ஜிஎஸ்டி) பாஜக அரசு செய்துள்ளது.
|
அச்சம்
ஜிஎஸ்டி அரசமைப்பு சட்டதிருத்த மசோதா தொடங்கிய காலம் முதல் ஜிஎஸ்டி தொடர்பாக மத்திய அரசு எடுத்து வைத்த அனைத்து நடவடிக்கைகளும் குறைபாடுகள் கொண்டதாகவே இருந்தன. முதன்மை பொருளாதார ஆலோசகரின் அறிவுரைகளை மத்திய அரசு கேட்கவில்லை. இந்த வரியை கண்டு வணிகர்கள், கடைக்காரர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் அச்சமடைந்தனர் என்று தெரிவித்தார்.
-
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications