பொருட்கள் மீது புதிய எம்.ஆர்.பி.விலை.. மத்திய அமைச்சர் கடும் எச்சரிக்கை
டெல்லி: ஜிஸ்டிக்கு பிறகு பொருட்கள் மீது புதிய எம்.ஆர்.பி. விலையை ஒட்டாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிக்கும் வகையில் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக சில பொருட்களில் விலை உயர்ந்தும், சில பொருட்களின் விலை குறைந்தும் உள்ளன. ஆனால் கடைகளில் ஜிஎஸ்டி அமலாவதற்கு முன்பு பிரிண்ட் செய்யப்பட்ட பழைய எம்.ஆர்.பி. விலைக்கே பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இது தொடர்பாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் செய்தியார்களிடம் கூறுகையில், பேக் செய்யப்பட்ட சரக்குப் பொருட்களில் எம்ஆர்பி விலையைத் திருத்தி ஸ்டிக்கர் ஒட்டவேண்டியது கட்டாயம். அவற்றை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல் முறை கண்டுபிடிக்கபட்டால் ரூ.25,000, 2 முறை கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.50,000 எனவும் 3-ம் முறை கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் மற்றும் 1 வருட சிறை தண்டனை விதிக்கப்படும்.
ஜிஎஸ்டியில் நுகர்வோர் பிரச்சினைகளை தீர்க்க, நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகத்தில் தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக உதவி எண்கள் 60 ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 14 எண்கள் வரி தொடர்பான பிரச்சினைகள் தீர்க்க அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 700 புகார்கள் வந்துள்ளன. புதிய எம்ஆர்பி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உற்பத்தியாளர்கள் தங்களிடம் உள்ள விற்கப்படாத பொருட்களைச் செப்டம்பர் மாதத்திற்குள் விற்பனை செய்ய வேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications