பொருட்கள் மீது புதிய எம்.ஆர்.பி.விலை.. மத்திய அமைச்சர் கடும் எச்சரிக்கை
டெல்லி: ஜிஸ்டிக்கு பிறகு பொருட்கள் மீது புதிய எம்.ஆர்.பி. விலையை ஒட்டாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிக்கும் வகையில் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக சில பொருட்களில் விலை உயர்ந்தும், சில பொருட்களின் விலை குறைந்தும் உள்ளன. ஆனால் கடைகளில் ஜிஎஸ்டி அமலாவதற்கு முன்பு பிரிண்ட் செய்யப்பட்ட பழைய எம்.ஆர்.பி. விலைக்கே பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இது தொடர்பாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் செய்தியார்களிடம் கூறுகையில், பேக் செய்யப்பட்ட சரக்குப் பொருட்களில் எம்ஆர்பி விலையைத் திருத்தி ஸ்டிக்கர் ஒட்டவேண்டியது கட்டாயம். அவற்றை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல் முறை கண்டுபிடிக்கபட்டால் ரூ.25,000, 2 முறை கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.50,000 எனவும் 3-ம் முறை கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் மற்றும் 1 வருட சிறை தண்டனை விதிக்கப்படும்.
ஜிஎஸ்டியில் நுகர்வோர் பிரச்சினைகளை தீர்க்க, நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகத்தில் தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக உதவி எண்கள் 60 ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 14 எண்கள் வரி தொடர்பான பிரச்சினைகள் தீர்க்க அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 700 புகார்கள் வந்துள்ளன. புதிய எம்ஆர்பி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உற்பத்தியாளர்கள் தங்களிடம் உள்ள விற்கப்படாத பொருட்களைச் செப்டம்பர் மாதத்திற்குள் விற்பனை செய்ய வேண்டும் என்றார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications