ஜிஎஸ்டி அமல்படுத்துவதில் சிக்கல்..ஏப்ரலில் அமலாக வாய்ப்பில்லை: அருண் ஜேட்லி பேட்டி
வரும் நிதி ஆண்டு தொடங்கும் ஏப்ரல் 1 முதல் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்க வாய்ப்பில்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
டெல்லி: டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முடிவு ஏதும் எடுக்கப்படாமல் முடிந்தது. அடுத்த கூட்டம் பிப்ரவரி 18 ஆம் தேதி நடைபெறுகிறது.
நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவைகளுக்கு ஒரே சீரான வரி விதிப்பை அமல்படுத்தும் வகையில் (ஜிஎஸ்டி) வரி விதிப்பு முறையை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அதிகார வரம்பு தொடர்பாக தொடர்ந்து பிரச்சினை நீடித்து வந்தது. இதற்கு தீர்வு காணும் நோக்கில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் எட்டு முறை நடந்துள்ளது. இருப்பினும் முடிவு எதுவும் எட்டப்படாமலே கூட்டம் முடிவடைந்தது.

இந்த நிலையில் 9-வது முறையாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறுகையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு அதிகாரம் தொடர்பாக இன்று நாள் முழுவதும் விவாதிக்கப்பட்டது.
வரும் நிதி ஆண்டு தொடங்கும் ஏப்ரல் 1 முதல் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்க வாய்ப்பில்லை எனக் கூறினார். வரும் ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வரலாம் என நம்பிக்கை உள்ளதாகவும் அருண் ஜெட்லி கூறினார். மேலும், இந்த கவுன்சில் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டவில்லை.
இரட்டை கட்டுப்பாட்டு பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகளிடம் ஒருமித்த கருத்து இல்லை. கடல் மார்க்கமாக நடைபெறும் வர்த்தகத்தின் மீது வரி விதிக்கும் உரிமை மாநில அரசுக்கு தரப்படும்.
ஜி.எஸ்.டி. மசோதாவில் வரி விகிதம் மத்திய, மாநில அரசுகளால் சமமாக நடத்தப்படும். பிப். 18-ம் தேதி அடுத்த கவுன்சில் கூட்டம் நடக்கும் என்றார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications