சபாஷ்... தாயை பிரிந்த 2 மாத சிங்கக் குட்டி மீட்பு... வனத்துறையின் தீவிர முயற்சிக்கு பலன்
அகமதாபாத்: குஜராத் வனப்பகுதியில், சுற்றித்திரிந்த 2 மாத சிங்கக்குட்டியை வனத்துறை அதிகாரிகள் மீட்டனர். கிர் விலங்கியல் சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வந்த 2 மாத சிங்கக்குட்டி ஒன்று, அண்மையில் தாயை விட்டு பிரிந்து காணாமல் போனது.
இதையடுத்து சிங்கக்குட்டியை தீவிரமாக தேடி வந்த வனத்துறையினர், மிகவும் உடல் நலிந்த நிலையில் குட்டியை அடர்ந்த ஜூனாகத் வனப்பகுதியில் கண்டுபிடித்தனர். அதற்கு முதலுதவி சிகிச்சை அளித்து, வனத்துறை அதிகாரிகள் விலங்குகளுக்கான பராமரிப்பு மையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.

குஜராத்தில் 1,400 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பில் அமைந்துள்ள கிர் காடுகளில் சிங்கங்கள் அதிக அளவில் வசித்து வருகின்றன. இங்கு சாலைகள் அமைப்பது, கிராமங்கள் விரிவாக்கம் செய்யப்படுவது மற்றும் சட்டவிரோத சுரங்கங்கள் தோண்டுவது ஆகியவற்றால் அதன் வாழ்விடங்கள் பாதிப்படைந்து உள்ளன.
அதே சமயம், 2015 ம் ஆண்டு இங்கு 600 சிங்கங்கள் இருந்தன. அடுத்த 2 வருடத்தில் 110 சிங்கங்களும், 94 சிங்க குட்டிகளும் இறந்துள்ளன. 75 சிறுத்தை குட்டிகளும் இறந்துள்ளன என தகவல் வெளியாகி உள்ளது.
Gujarat: A 2-month-old ailing lion cub was rescued from Gir National Park, Junagadh. The cub was taken to an animal care center. (26-07) pic.twitter.com/PW4UpjlQE6
— ANI (@ANI) July 26, 2019
சிங்கங்கள் இடையேயான மோதல் மற்றும் உடல் உறுப்புகள் பாதிப்பு ஆகியவை சமீபத்திய உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. குறைந்த காலத்தில் சிங்கங்கள் அதிக அளவில் உயிரிழந்து உள்ளது வன துறை அதிகாரிகள் மற்றும் வன ஆர்வலர்கள் இடையே வருத்தத்தினை ஏற்படுத்தி உள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications