'படேல்கள்' போராட்டத்தை ஒடுக்க அதிரடி.. ரூ1000 கோடி நிதி உதவி திட்டத்தை அறிவித்தது குஜராத் அரசு!
காந்திநகர்: 'இடஒதுக்கீடு கொடு; அல்லது இடஒதுக்கீட்டை ஒழி' என்ற முழக்கத்தை முன்வைத்து படேல் சமூகத்தினர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் முற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ரூ1,000 கோடி நிதி உதவித் திட்டத்தை குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் அறிவித்துள்ளார்.
குஜராத்தில் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த படேல்கள், எங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும்; இல்லையெனில் இடஒதுக்கீட்டு முறையையே ஒழிக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு 22 வயது இளைஜர் ஹர்திக் படேல் தலைமை வகித்து வருகிறார்.

பீகார் சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நேரத்தில் இப்போராட்டத்தை பா.ஜ.க. பெரும் தலைவலியாக கருதுகிறது. இதனால் இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஹர்திக் படேலின் நண்பர் மீது பிரிவினையைத் தூண்டியதாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் நேற்று அதிரடியாக கல்வி, வேலைவாய்ப்பில் சலுகைகள் உட்பட ரூ1,000 கோடி நிதி உதவித் திட்டங்களை அறிவித்துள்ளார். அதில், அரசுப் பணிகளில் சேருவதற்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்படுகிறது; எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மாணவர்களுக்கு அளிக்கப்படுவது போல இதர முற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் கல்வி நிதி உதவி வழங்கப்படும் இதற்கு ரூ1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பவை முக்கிய அம்சங்களாகும்.
மேலும், படேல் சமூகத்தினர் தங்களது போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும். நான் 2017ஆம் ஆண்டு வரை முதல்வராக நீடிப்பேன். நிச்சயம் ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும் ஆனந்திபென் படேல் கூறினார்.
லாலிபாப்...
ஆனால் இந்த அறிவிப்புகளை நிராகரித்திருக்கும் படேல் கிளர்ச்சி குழு தலைவர் ஹர்திக் படேல், எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு பதிலாக லாலிபாப் மிட்டாயைத்தான் ஆனந்திபென் அரசு தருகிறது என்றும் விமர்சித்துள்ளார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications