“மோடி” அவதூறு.. ராகுல் காந்தி பதவியை பறித்த வழக்கு! விலகுவதாக அறிவித்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி
காந்திநகர்: மோடி குறித்து அவதூறாக பேசியதாக கூறி தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றவாளி என்ற சூரத் மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைக்கக்கோரிய வழக்கில் இருந்து விலகுவதாக குஜராத் உயர்நீதிமன்ற பெண் நீதிபதி கீதா கோபி அறிவித்து உள்ளார்.
கர்நாடகா மாநிலம் கோலாரில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடியின் சாதி பெயர் குறித்து ராகுல் காந்தி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மோடி என்ற துணை பெயரை குறிப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, இந்த பெயரை துணை பெயராக வைத்து இருப்பவர்கள் எல்லாம்.. என்று ஒரு வார்த்தையை சொல்லி விமர்சித்து பேசினார்.

இதன் மூலம் மோடி சமூகத்தையே ராகுல் காந்தி இழிவுபடுத்திவிட்டதாக கூறி குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். சுமார் 4 ஆண்டுகளாக இந்த வழக்கு மீதான விசாரணை சூரத் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி மீண்டும் சூரத் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா இந்த வழக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என்று தீர்ப்பளித்தார். இதனை தொடர்ந்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக அவருக்கு 30 நாட்கள் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், 30 நாட்களில் அவதூறு வழக்கு தொடர்பாக விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு அனுமதி வழங்கியது.
இதற்கிடையே 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட காரணத்தால் எம்பி பதவியில் இருந்தே ராகுல் காந்தி நீக்கப்பட்டார். இதையடுத்து சமீபத்தில் 20 ஆண்டுகளாக அவர் வசித்து வந்த அரசு இல்லத்தையும் ராகுல் காந்தி காலி செய்தார். இந்த நிலையில் சூரத் உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைக்கக்கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி கீதா கோபி அமர்வு முன்பாக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. அப்போது இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர் பிஎஸ் சாம்பனேரி வலியுறுத்தி இருந்தார். அதே நேரம் குஜராத் அரசு வழக்கறிஞர் இந்த வழக்கை அவசர விசாரணைக்கு கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனால், இது தனிப்பட்ட புகார் என்றும், இதில் அரசு தரப்பு தலையிட வேண்டிய அவசியம் இல்லை எனவும் ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர் கூறினார். இந்த விசாரணையை தொடர்ந்து நீதிபதி கீதா கோபி வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் இந்த வழக்கை வேறொரு அமர்வுக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதியிடம் அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications