வேலை பிடிக்கவில்லையாம்.. குஜராத்தை இளைஞர் செய்ததை பாருங்க.. துண்டாகிப்போன 4 விரல்கள்
காந்தி நகர்: குஜராத்தை சேர்ந்த நபர் வேலையில் இருந்து விலகுவதற்காக தனது கையில் உள்ள 4 விரல்களை தானே வெட்டிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள வாரசா மினி பஜாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் மயூர் தரபாரா (வயது 32). இவர் அந்த நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த 8 ம் தேதி போலீசில் புகார் ஒன்றை தெரிவித்தார். அந்த புகாரில், ‛‛கடந்த 8 ம் தேதி நான் எனது நண்பரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தேன். அப்போது திடீரென்று மயக்கம் ஏற்பட்டது. கண்விழித்து பார்த்தபோது கையில் இருந்த 4 விரல்கள்வெட்டப்பட்டு இருந்தது'' என்று புகாரளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சூரத் குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது போலீசாருக்கு மயூர் தரபாராவின் மீது சந்தேகம் வலுத்தது. இதனால் அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது மயூர் தரபாரா சொன்ன தகவல் திடுக்கிட வைத்தது.
அதாவது மயூர் தரபாரா பணியாற்றும் நிறுவனம் அவரது உறவினருக்கு சொந்தமானதாகும். அந்த நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக அவர் பணியாற்றி வரும் நிலையில் அந்த பணியை அவர் விரும்பவில்லை. அதோடு பணியை விட்டு நிற்க வேண்டும் என்று அவர் விரும்பி உள்ளார்.
ஆனால் வேலையை விடுவதாக நிறுவனத்தை நடத்தும் உறவினரிடம் கூறுவதற்கு மயூரா தரபாராவுக்கு தைரியம் இல்லை. இதனால் பணியை விட்டு நிற்க ஏதாவது ஒரு காரணம் வேண்டும் என்று நினைத்த அவர் கத்தியை எடுத்து தனது இடது கையில் உள்ள 4 விரல்களையும் வெட்டி உள்ளார். அதன்பிறகு மோட்டார் சைக்கிளில் சென்றபோது மயங்கி விழுந்ததோடு, விரல்களை யாரோ துண்டித்து விட்டதாக கூறி நாடகமாடியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பொதுவாக ஊழியர்கள் வேலையை விட்டு விலகுவதற்கு உடல்நலம், குடும்ப பிரச்சினை, பொருளாதார சூழல் என பல காரணங்களை கூறுவார்கள். இல்லாவிட்டால் புதிய வேலையை தேடிவிட்டு இருக்கும் பணியில் இருந்து விலகுவார்கள். ஆனால் மயூரா தரபாரா வேலை பிடிக்காததால் அதில் இருந்து விலக தனது கையின் 4 விரல்களை வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்!












Click it and Unblock the Notifications