வேலை பிடிக்கவில்லையாம்.. குஜராத்தை இளைஞர் செய்ததை பாருங்க.. துண்டாகிப்போன 4 விரல்கள்
காந்தி நகர்: குஜராத்தை சேர்ந்த நபர் வேலையில் இருந்து விலகுவதற்காக தனது கையில் உள்ள 4 விரல்களை தானே வெட்டிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள வாரசா மினி பஜாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் மயூர் தரபாரா (வயது 32). இவர் அந்த நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த 8 ம் தேதி போலீசில் புகார் ஒன்றை தெரிவித்தார். அந்த புகாரில், ‛‛கடந்த 8 ம் தேதி நான் எனது நண்பரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தேன். அப்போது திடீரென்று மயக்கம் ஏற்பட்டது. கண்விழித்து பார்த்தபோது கையில் இருந்த 4 விரல்கள்வெட்டப்பட்டு இருந்தது'' என்று புகாரளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சூரத் குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது போலீசாருக்கு மயூர் தரபாராவின் மீது சந்தேகம் வலுத்தது. இதனால் அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது மயூர் தரபாரா சொன்ன தகவல் திடுக்கிட வைத்தது.
அதாவது மயூர் தரபாரா பணியாற்றும் நிறுவனம் அவரது உறவினருக்கு சொந்தமானதாகும். அந்த நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக அவர் பணியாற்றி வரும் நிலையில் அந்த பணியை அவர் விரும்பவில்லை. அதோடு பணியை விட்டு நிற்க வேண்டும் என்று அவர் விரும்பி உள்ளார்.
ஆனால் வேலையை விடுவதாக நிறுவனத்தை நடத்தும் உறவினரிடம் கூறுவதற்கு மயூரா தரபாராவுக்கு தைரியம் இல்லை. இதனால் பணியை விட்டு நிற்க ஏதாவது ஒரு காரணம் வேண்டும் என்று நினைத்த அவர் கத்தியை எடுத்து தனது இடது கையில் உள்ள 4 விரல்களையும் வெட்டி உள்ளார். அதன்பிறகு மோட்டார் சைக்கிளில் சென்றபோது மயங்கி விழுந்ததோடு, விரல்களை யாரோ துண்டித்து விட்டதாக கூறி நாடகமாடியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பொதுவாக ஊழியர்கள் வேலையை விட்டு விலகுவதற்கு உடல்நலம், குடும்ப பிரச்சினை, பொருளாதார சூழல் என பல காரணங்களை கூறுவார்கள். இல்லாவிட்டால் புதிய வேலையை தேடிவிட்டு இருக்கும் பணியில் இருந்து விலகுவார்கள். ஆனால் மயூரா தரபாரா வேலை பிடிக்காததால் அதில் இருந்து விலக தனது கையின் 4 விரல்களை வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications