பயந்து போகாதீர்கள்.. பாதுகாப்பு தருகிறோம்.. வெளி மாநில தொழிலாளர்களுக்கு குஜராத் அரசு வேண்டுகோள்
காந்திநகர்: குஜராத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று, பிற மாநில தொழிலாளர்களை, அம்மாநில உள்துறை அமைச்சர், பிரதீப் சிங் ஜடேஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
குஜராத்தில், 14 மாதமேயான பச்சிளம் பெண் குழந்தை பலாத்காரத்திற்கு உள்ளான சம்பவத்தையடுத்து, இதுதொடர்பான சந்தேகத்தின்பேரில், உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள்.

குஜராத்தின் 5 மாவட்டங்களில் இந்த தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து, வெளி மாநில தொழிலாளிகள் அச்சத்தால், குஜராத்தை விட்டு வெளியேறி வருகிறார்கள்.
இந்த நிலையில் பிரதீப் சிங் ஜடேஜா இன்று கூறுகையில, குஜராத்திற்கு பணிக்கு வந்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது எங்கள் பொறுப்பு. இந்த விஷயத்தில் நாங்கள் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம். 35 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்துள்ளோம். 450க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்லோம். மத்திய அரசிடம் அறிக்கை அளித்துள்ளோம். எனவே தொழிலாளர்கள் குஜராத்திற்கு திரும்ப வேண்டும்.
பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித்தருவோம். அதற்காக அப்பாவிகளை தாக்காதீர்கள். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications