குஜராத் சட்டசபையில் சர்ச்சைக்குரிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மீண்டும் நிறைவேற்றம்!!

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத் மாநில சட்டசபையில் ஜனாதிபதிகளால் 3 முறை நிராகரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் இன்று மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

குஜராத் மாநில சட்டசபையில் கடந்த 2004 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. ஆனால் அரசியல் உள்நோக்கத்துடன் பழிவாங்கலுக்காக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

Gujarat passes controversial anti-terror Bill

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதிகளாக இருந்த அப்துல் கலாம் மற்றும் பிரதீபா பாட்டீல் ஆகியோர் இந்த சட்டத்துக்கு அடுத்தடுத்து ஒப்புதல் தர மறுத்து திருப்பி அனுப்பிவிட்டனர். இந்நிலையில் இன்று அதே சட்டம் கூடுதலாக சில அம்சங்களுடன் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத்தின்படி

சந்தேகத்துரிய நபர்களின் தொலைபேசி மற்றும் செல்போன் பேச்சுகளை மாநில அரசு அதிகாரிகள் இடைமறித்து ஒட்டு கேட்கலாம்.

கைது செய்யப்படும் நபர்களிடம் போலீசார் விசாரிக்கும் காலத்தை நீட்டிக்கலாம்.

போலீஸ் உயரதிகாரிகளிடம் பிடிபடும் நபர்கள் அளிக்கும் வாக்குமூலங்களை நீதிமன்ற வழக்குகளில் சாட்சியங்களாக பயன்படுத்தலாம்.

இதனிடையே இந்த சட்டத்தின் உள்நோக்கம் மிகவும் கொடூரமானது. அரசியல் ஆதாயத்துக்காகவே இதை அரசு சட்டமாக நிறைவேற்றியுள்ளது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+