காந்தி ஜெயந்தி: குஜராத்தில் 285 கைதிகள் விடுதலை
அகமதாபாத்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்திஜி பிறந்த மாநிலமான குஜராத்தில் சுமார் 285 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த தினமான நேற்று, குஜராத் மாநிலத்தில் உள்ள பல்வேறு சிறைகளில் இருந்து 285 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து நேற்று குஜராத் மாநில அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 'ஆயுள் தண்டனை பெற்று சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளில் 12 ஆண்டு கால தண்டனையை அனுபவித்த 150 கைதிகளும், தண்டனை காலத்தில் 75 சதவீதத்தை நிறைவு செய்த 129 கைதிகளும் காந்தி ஜெயந்தியையொட்டி விடுதலை செய்யப்பட்டனர்.
உடல்நலம் குன்றிய நிலையில் தங்களது தேவைகளை சுயமாக நிறைவேற்றிக் கொள்ள முடியாத 6 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
மாநில சிறைத்துறை ஆலோசனை கமிட்டி அதிகாரிகளின் பரிந்துரையின்படி இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தொடர் குற்றவாளிகள், கற்பழிப்பு, தேசிய பாதுகாப்பு தடை சட்டத்தில் தண்டனை பெற்றவர்கள் ஆகியோரில் யாரும் நேற்று விடுவிக்கப்படவில்லை' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications