குஜராத்தில் ஓ.பி.சி. பட்டியலில் சேர்க்க கோரி படேல் வகுப்பினர் கிளர்ச்சி... தலையிடுகிறது ஆர்.எஸ்.எஸ்
அகமதாபாத்: குஜராத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (ஓ.பி.சி) சேர்க்கக் கோரி படேல் வகுப்பினர் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நெருக்கடியில் சிக்கியிருக்கும் குஜராத் அரசைக் காப்பாற்றுவதற்காக படேல் சமூகத்தினருடன் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வந்துள்ளது.
குஜராத்தில் பெரும்பான்மையாக உள்ள படேல் சமூகத்தினர் முற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ளனர். ஆனால் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது படேல் சமூகத்தினர் கோரிக்கை.

இதற்காக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக படேல் சமூகத்தினர் தீவிரமாக போராடி வருகின்றனர். இதன் ஒருகட்டமாக இன்று சுமார் 25 லட்சம் பேர் பங்கேற்கும் பிரமாண்ட பேரணியை அகமதாபாத்தில் நடத்தப் போவதாக படேல் சமூகத்தினர் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இப்போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஹர்திக் படேலை குஜராத் அரசு நேற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஆனால் தமது பிரதிநிதிகள் 3 பேரை ஹர்திக் பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைத்தார்.
7 அமைச்சர்கள் அடங்கிய குழுவினர் படேல் சமூகத் தலைவர்களுடன் அகமதாபாத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தக் கூட்டத்துக்கு மாநில சுகாதாரத் துறை அமைச்சர் நிதின் படேல் தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்துக்குப் பிறகு பேட்டியளித்த அமைச்சர் நிதின் படேல், படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க இயலாது என்ற அரசின் நிலைப்பாட்டை சமூகத் தலைவர்களிடம் தெளிவுபடுத்தியுள்ளதாகக் கூறினார். இதனால் படேல் சமூகத்தினர் கொந்தளித்து போயுள்ளனர்.
இது குஜராத் அரசுக்கு மிகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் படேல் சமூகத் தலைவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு பாரதிய ஜனதாவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் முன்வந்துள்ளது.
இது குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செய்தித் தொடர்பாளர் பிரதீப் ஜெயின் கூறுகையில், எங்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் படேல் சமூகத்தினரின் போராட்டம் குறித்து விவாதித்தோம்.
இந்த விஷயத்தில் சுமுக தீர்வு ஏற்படுவதற்கு எங்கள் அமைப்பு முயற்சிக்கும். ஏனெனில், சமூக நல்லிணக்கமும், ஒற்றுமையும் காப்பாற்றப்பட வேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications