குஜராத்தில் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம் தொடங்கப்படும்.. மத்திய அரசு அறிவிப்பு
குஜராத்தில் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
டெல்லி: குஜராத்தில் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
குஜராத்தில் தேர்தல் நடந்து கொண்டு இருந்ததால் அம்மாநிலத்திற்கு எந்த விதமான நலத்திட்டங்களும் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது தேர்தல் முடிந்துள்ளதால் குஜராத் மாநிலத்திற்கு மத்திய அரசு நலத்திட்ட அறிவிப்புகள் வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி குஜராத்தில் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
இதற்காக வதோதராவில் நிலம் தேர்வு செய்யப்பட்டு பல்கலைக்கழகம் அமைக்கப்படும். இந்த பணிகளை 2018 இறுதிக்குள் முடிக்கப்படும் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டு இருக்கிறது.
குஜராத் தேர்தல் முடிவுகள் மத்திய பாஜக அரசுக்கு சாதகமாக வந்த இரண்டு நாளில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications