42 நாள் பரோல் கொடுங்க.. பலாத்கார சாமியார் குர்மீத் மனு... காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்
ரோதக்: பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள சாமியார் குர்மீத் ராம் ரகீம், விவசாய பணிக்காக 42 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்து உள்ளார். பரோலுக்காக இவர் விடுத்த கோரிக்கையை பார்த்து சிறை அதிகாரிகள் ஆச்சர்யப்பட்டுள்ளனர். எனினும் கோரிக்கை ஏற்கப்படுமா என்பது இதுவரை தெரியவில்லை.
அரியானாவைச் சேர்ந்தவர் சாமியார் தான் குர்மீத் ராம். இவர் அரியானாவில் தேரா சச்சா சவுதா அமைப்பினை ஏற்படுத்தி மக்களிடம் வசீகரமான கருத்துக்களை கூறி கவர்ந்தார். இதன் மூலம் வடமாநிலங்களில் செல்வாக்கு பெற்ற அவர், பல லட்சம் ஆதரவாளர்களுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

குர்மீத்தை தலைவராக ஏற்றுக்கொண்டு பெரிய அளவில் தொண்டர்கள் கூட்டம் அரியானா மற்றும் ராஜஸ்தானில் உருவானது. அரசியல் சக்திகளை தீர்மானிக்கும் அளவுக்கு குர்மீத் ராம் வளர்ந்து இருந்தார். இவர் மீது 2 பெண்கள் பாலியல் பலாத்கார புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இது தொடர்பான விசாரணை நடத்த போலீசார் முயன்ற போது பெரும் கலவரம் வெடித்து ஏராளமானோர் உயிரிழந்தனர்.
இதனால் சர்ச்சையில் சிக்கிய குர்மீத் ராம் ரகீமை அரியானா போலீசார் கைது செய்தனர். இவர் மீது 2 பலாத்கார வழக்குகள், பத்திரிக்கையாளர் ஒருவரை கொலை செய்த வழக்கு பதியப்பட்டன.
பலாத்கார வழக்குகளை விசாரித்த சிபிஐ நீதிமன்றம் இவருக்கு கடந்த 2017ல் 20 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து, அரியானா மாநிலம், ரோதக்கில் உள்ள சுனாரியா சிறையில் குர்மீத் ராம் ரகீம் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, பத்திரிக்கைாளர் கொலை வழக்கில் இவருக்கு இந்தாண்டு ஜனவரியில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது குர்மீத் ராம் ரகீம், விவசாய பணிகளை கவனிக்க 42 நாட்கள் பரோல் கேட்டுள்ளார். இவரது விண்ணப்பத்தை சிர்சா மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள சிறை கண்காணிப்பாளர், சிறை விதிமுறைகளை குர்மீத் ஒழுங்காக பின்பற்றுவதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் இவருக்கு பரோல் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications