இந்திய பாதுகாப்பு படை குறித்து சர்ச்சை கருத்து… கவுகாத்தி கல்லூரி பேராசிரியை கைது
கவுகாத்தி: இந்திய பாதுகாப்பு படை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கவுகாத்தி கல்லூரி பேராசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தானின் வர்த்தக ரீதியான உறவுகள், அரசியல் ரீதியான செயல்பாடுகளை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.

இந் நிலையில், கவுகாத்தியில் உள்ள கல்லூரி ஒன்றின் ஆங்கில துறையின் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருபவர் பாப்ரி பானர்ஜி. புல்வாமா தாக்குதல் குறித்து அவர் முகநூலில் வெளியிட்ட தொடர்ச்சியான கருத்துகள் சமூக வலை தளங்களில் வைரலானது.
முகநூலில் அவர் பதிவிட்டுள்ள கருத்துகள் இதுதான்: 45 இளம் வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இது போர் அல்ல.. அவர்களுக்கு திரும்ப சண்டையிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை
.
இது கோழைத்தனத்தின் உச்சக்கட்டம்.. இது இந்தியர்களின் இதயத்தை உடைக்கக்கூடிய செய்தி.. ஆனால் பாதுகாப்பு படையினர் காஷ்மீரில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்..?
நீங்கள் அவர்களின் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்கிறீர்கள்.. அவர்களின் குழந்தைகளை கொலை செய்கிறீர்கள்.. நீங்கள் அங்குள்ள ஆண்களை படுகொலை செய்கிறீர்கள்.. உங்கள் ஊடகங்கள் அவர்களை அச்சுறுத்துகின்றன.
ஆனால் நீங்கள் பதிலடி இல்லை என்று நினைகிறீர்களா..? உங்களுக்கு தெரியுமா.. தீவிரவாதம் வேண்டுமானால் இஸ்லாமை சார்ந்ததாக இருக்கலாம். ஆனால் கர்மா மிக முக்கியமானது.. அதை அனுபவியுங்கள் என்று பாப்ரி பானர்ஜி தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனைதொடர்ந்து அசாம் போலீஸ் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளது. இந்த விவகாரத்தில், கல்லூரி நிர்வாகமும் பாப்ரி பானர்ஜியை இடைநீக்கம் செய்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications