எனக்கு பிடிக்காட்டி தூங்கிடுவேன்..அண்ணே வாசிங்க..நான் தூங்கனும்.. செந்தில் போல் சேட்டை செய்த ரேவண்ணா
எடியூரப்பா பேசும்போது எச் டி ரேவண்ணா தூங்கிக் கொண்டிருந்தார்.
Recommended Video

பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் எடியூரப்பா உரையாற்றிக் கொண்டிருந்தபோது குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணா தூங்கிக் கொண்டிருந்தார்.
கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தங்கள் தரப்பு எம்எல்ஏக்கள் காணாமல் போகாமல் இருக்கிறார்களா என்று காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியினர் கவனமாக இருந்தனர்.

அப்படியும் இரு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆனந்த சிங் மற்றும் பிரதாப் கௌடா ஆகியோரை பாஜக எம்எல்ஏ சோமசேகர ரெட்டி கடத்திவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்களும் சட்டசபைக்கு வந்திருந்தனர்.
உணவு இடைவேளைக்கு பிறகு சட்டசபை மீண்டும் கூடியது. இதையடுத்து முதல்வர் எடியூரப்பா தனது உரையை தொடங்கினார். அப்போது தனது வாழ்நாள் முழுவதையும் விவசாயிகள் மற்றும் மக்கள் பணிகளுக்காக ஈடுபடுவேன் என்று உருக்கமாக ஒரு பேச்சை பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணா தூங்கிக் கொண்டிருந்தார். இதை பார்க்கும் போது கரகாட்டக்காரன் படத்தில் செந்தில் கவுண்டமணி காமெடியில் எனக்கு ஏதாவது பிடிக்காவிட்டால் நான் தூங்கிவிடுவேன், அண்ணே நீங்க வாசிங்க, நான் தூங்கனும் என்பது போல் இருந்தது.












Click it and Unblock the Notifications