சுனந்தாவுடன் பிரச்சனை இருந்தது: டெல்லி போலீசிடம் தெரிவித்த தரூர்
டெல்லி: சுனந்தாவுக்கும், தனக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் அது சரியாகிவிட்டதாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் டெல்லி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் பிணமாகக் கிடந்தார். இந்நிலையில் அவர் விஷம் வைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக சுனந்தாவின் உடலை பிரேதப் பரிசோதனை செய்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு கடந்த மாத இறுதியில் போலீசாரிடம் அறிக்கை அளித்துள்ளது.
கடந்த ஆண்டு சுனந்தா இறந்த இரண்டாவது நாள் தரூர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தை முன்னணி நாளிதழ் பெற்றுள்ளது. வாக்குமூலத்தில் தரூர் கூறியிருப்பதாவது,

ஹோட்டல்
நான் லீலா பேலஸ் ஹோட்டலுக்கு சென்று காலை 6.40 மணி வரை சுனந்தாவுடன் இருந்தேன். இரவில் எங்களுக்கு இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் அவர் அதிகாலை 2 மணிக்கு சத்தம் போட்டார். பின்னர் சமாதானம் ஆகிவிட்டார்.

தூக்கமின்மை
சுனந்தா தூக்கமின்மையால் தவித்து வந்தார். அவரால் இரவு நேரத்தில் தூங்க முடியாது. அதனால் அவர் தூங்குவதற்கு ஆல்பிராக்ஸ் மருந்தை உட்கொள்வார்.

உணவு
சுனந்தா கடந்த 2 நாட்களாக சாப்பிடவில்லை. 16ம் தேதி காளான் சூப் குடித்தார். அவருக்கு மதிய உணவை எனது கையாலேயே கொடுத்தேன். பின்னர் இளநீர் மட்டும் குடித்தார். உணவை நினைத்தாலே அவருக்கு குமட்டும் நிலை இருந்தது.

டார்லிங்
நான் படுக்கை அறைக்குள் நுழைந்து டார்லிங் இப்பொழுது எப்படி இருக்கிறது என்று கேட்டேன். ஆனால் சுனந்தா அசையவே இல்லை. அவருக்கு காய்ச்சலாக இருக்குமோ என நினைத்து நெற்றியில் கையை வைத்தபோது அவரது உடல் குளிர்ச்சியாக இருந்தது. கை விரைத்திருந்தது. உடனே நான் பிறரை அழைத்ததோடு ஹோட்டலுக்கு போன் செய்து டாக்டரை அனுப்பி வைக்குமாறு கூறினேன். ஆனால் அதற்குள் அனைத்தும் முடிந்துவிட்டது என்றார் தரூர்.

டாக்டர்கள்
இறக்கும் முன்பு சுனந்தாவின் உடலில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும், அவர் ஆல்பிராக்ஸ் மருந்தை உட்கொள்ளவே இல்லை என்றும் மருத்துவர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுனந்தாவின் உடலுக்கு அருகே இரண்டு அட்டை ஆல்பிராக்ஸ் மாத்திரை கிடந்துள்ளது. அதுவும் மாத்திரை இல்லாமல் வெறும் அட்டை. அதனால் அவர் அளவுக்கு அதிகமாக ஆல்பிராக்ஸ் எடுத்ததால் இறந்திருக்கக்கூடும் என்று முதலில் கருதப்பட்டது.

காயம்
சுனந்தா உடலில் காயங்கள் இருந்துள்ளது. மேலும் அவரது விரலில் ஊசி போட்ட தடம் இருந்துள்ளது. கொலையை செய்தவர்கள் தெளிவாக திட்டமிட்டு செய்திருக்கக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொலோனியம்
சுனந்தாவின் உடலில் பொலோனியம் 210 என்ற கதிர்வீச்சு தன்மை கொண்ட விஷம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த விஷம் பாமரருக்கு கிடைக்காதது.

தரூர்
தற்போது சுனந்தா பற்றி எந்த கேள்வி கேட்டாலும் பதில் அளிக்காமல் இருந்து வருகிறார் சசி தரூர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications