ஹபீஸ் சயீத் சுதந்திரமாக நாடு முழுவதும் உலவலாமாம்: சொல்வது பாக். தூதர் அப்துல் பாஷித்
டெல்லி: பாகிஸ்தானியரான ஹபீஸ் சயீத் சுதந்திரமாக தனது சொந்த நாட்டில் சுதந்திரமாக உலவலாம் என்றும் அதில் என்ன பிரச்சினை என்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாஷித் தெரிவித்துள்ளார்.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக ஹபீஸ் சயீத் மீது இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் தீவிரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பாவின், தாய் அமைப்பான ஜமாத் உத் தவாவின் தலைவராக ஹபீஸ் சயீத்தை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளன.

சுதந்திர நடமாட்டம்
இந்தியாவால் தேடப்படும் தீவிரவாதிகளின் பட்டியலில் மிக முக்கிய இடம் பிடித்திருக்கும் ஹபீஸ் சயீத் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடமாடுவதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாஷித்திடம் இது குறித்து கேள்வி எழுப்பட்டது.
உரிமை உண்டு
அதற்கு பதிலளித்த அவர், ஹபீஸ் சயீது ஒரு பாகிஸ்தான் நாட்டவர் என்றும் அவர் பாகிஸ்தானில் எந்த ஒரு பகுதியிலும் சுதந்திரமாக உலவலாம் என்றும் அதில் உங்களுக்கு என்ன பிரச்னை என கேள்வி எழுப்பினார்.
பாகிஸ்தான் தூதரின் சர்ச்சை
இந்தியாவில் மிகப்பெரும் தீவிரவாத தாக்குதலை நடத்த ஹபீஸ் சயீத் திட்டமிட்டுள்ளதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பாகிஸ்தான் தூதரின் பேச்சு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே காஷ்மீர் பிரிவினைவாத இயக்கங்களை டெல்லியில் அழைத்து பேசி அப்துல் பாஷித் சர்ச்சையில் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications