Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இப்படியுமா நடக்கும்? முடி மாற்று அறுவை சிகிச்சையால் இருவர் பலி! கம்பி எண்ணும் பல் மருத்துவர் அனுஷ்கா

Subscribe to Oneindia Tamil

கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து பல் மருத்துவர் அனுஷ்கா கைது செய்யப்பட்டார்.

உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் பொறியாளர்களாக இருந்தவர்கள் வினித் குமார் தூபே, பிரமோத் கட்டியார். இவர்களுக்கு தலையில் முடி இல்லாமல் வழுக்கையாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

crime kanpur

இதையடுத்து டாக்டர் அனுஷ்கா திவாரி என்பவரிடம் இருவரும் முடி வளர்த்தலுக்கான சிகிச்சைக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது அவர் இருவருக்கும் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரைத்தாராம்.

இதையடுத்து கடந்த 13 ஆம் தேதி வினித் குமார் தூபேவுக்கு முடி மாற்று அறுவை சிகிச்சை நடந்ததாம். இதையடுத்து மார்ச் 15 ஆம் தேதி இறந்துவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவருடைய மனைவி ஜெயா திரிபாதி, கடந்த மே 9ஆம் தேதி புகார் கொடுத்தார்.

அப்போதுதான் முடி மாற்று அறுவைச் சிகிச்சை செய்த அனுஷ்கா பல் மருத்துவர் என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயா, அந்த மருத்துவர் மீது புகார் கொடுத்தார். ஆனால் போலீஸார் அந்த வழக்கை பதிவு செய்வதில் தாமதம் செய்ததாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து உ.பி. முதல்வர் யோகியின் தனிப்பிரிவிற்கு ஜெயா புகார் அளித்ததை அடுத்து போலீஸார் ஜெயாவின் புகாரை பதிவு செய்தனர். தனது புகாரில் ஜெயா கூறியிருப்பதாவது: தனது கணவருக்கு மார்ச் 13 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதையடுத்து அவரது முகம் வீங்கியிருப்பதாக கூறி கடந்த மார்ச் 14 ஆம் தேதி அனுஷ்கா எனக்கு போன் செய்தார். இதனால் பதறியடித்தபடி சென்றேன். என் கணவரின் முகம் வீங்கியிருந்தது. இதனால் மருத்துவரை சந்திக்க முயற்சித்தேன். அப்போது மருத்துவர் அங்கு இல்லை. இதையடுத்து மார்ச் 15 ஆம் தேதி எனது கணவர் சிறிது நேரத்தில் இறந்துவிட்டார் என்றார்கள் என அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும் அனுஷ்கா பல் மருத்துவர் என்றும் தனக்கு சம்பந்தமே இல்லாத முடி சிகிச்சைக்கு அவர் சர்ஜரி செய்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் புகார் அளித்திருந்தார்.

அதே போல் பிரமோத்தும், அனுஷ்காவிடம் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்துக் கொண்டு உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அனுஷ்காவை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் பல் மருத்துவர் அனுஷ்கா நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், அனுஷ்காவுக்கு எதிராக முக்கிய குற்றச்சாட்டுகள் உள்ளன. தனது துறைக்கு சம்பந்தமில்லாத வேறு துறையில் அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். இதற்கான போதுமான ஆதாரம் உள்ளது. காகதேவ் காவல் நிலையத்தில் புகாரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அனுஷ்கா மீது தவறு இருப்பதற்கான முகாந்திரம் உள்ளது என்றார். இதையடுத்து அனுஷ்காவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக அரசு மருத்துவமனைகளில் துப்புரவு தொழில் செய்யும் நபர்கள் டிரிப்ஸ் போடுவது, நர்ஸுக்கு உதவியாக இருப்பது, ஊசி போடுவது, அடிப்பட்ட இடத்தில் மருந்து போட்டு கட்டு போடுவது, மருத்துவருக்கு பதில் செவிலியரே குழந்தை பிறப்பில் ஈடுபடுவது உள்ளிட்ட செயல்களை செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் பல் மருத்துவர் ஒருவர் முடி மாற்று அறுவை சிகிச்சையை எப்படி மேற்கொண்டார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+