ருத்ரா ஹெலிகாப்டர், தேஜா போர் விமானம்... பெங்களூரு கண்காட்சிக்கு தயாராகிறது ஹெச்.ஏ.எல்.!
பெங்களூரு: ஆசியாவிலேயே மிகப் பெரிய விமான கண்காட்சிக்கு மத்திய அரசுக்குச் சொந்தமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் தயாராகிக் கொண்டிருக்கிறது. இக்கண்காட்சியில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் தமது இலகு ரக ஹெலிகாப்டர் ருத்ரா, தேஜா விமானம் உள்ளிட்டவற்றை காட்சிக்கு வைக்க இருக்கிறது.

பெங்களூருவில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் விமான கண்காட்சி ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும். இந்த ஆண்டு 10-வது சர்வதேச விமான கண்காட்சி பெங்களூருவில் உள்ள யெலகன்கா ஏர் போர்ஸ் ஸ்டேஷனில் வரும் 18-ந் தேதி தொடங்குகிறது. 5 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

இக் கண்காட்சியில் விமானம் தயாரிக்கும் 328 வெளிநாட்டு கம்பெனிகள், 295 இந்திய கம்பெனிகள் கலந்து கொள்கின்றன. பிரான்ஸை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான டாஸால்ட்டுடன் 126 விலை மதிப்பு மிக்க ரேபல் பைட்டர் பிளேன்களை வாங்கும் திட்டமும் கையெழுத்தாகிறது.
காங்கிரஸ் ஆட்சியில் ஹெலிகாப்டர் ஊழலில் சிக்கிய பின்மெக்கானிக்கா நிறுவனமும் இதில் கலந்து கொள்கிறது. இந்த ஏரோ ஷோவில் பிரதமர் மோடி ரபேல் பைட்டர் விமானத்தை இயக்க இருக்கிறார்.

இக் கண்காட்சியில் பிப்.16-ந் தேதிமுதல் 18-ந் தேதி வரை விமானத் தொழில்துறை தொடர்பான பன்னாட்டு விமானத்தொழில் கருத்தரங்கமும் நடைபெற உள்ளது.
உலகின் தலைசிறந்த 75 விமானத் தொழில்துறை வல்லுநர்கள் கருத்தரங்கில்பேசவிருக்கிறார்கள். கண்காட்சி மற்றும் கருத்தரங்குகளில் வெளிநாடுகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
இக்கண்காட்சி குறித்து மத்திய அரசுக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் டி. ஸ்வர்ன ராஜூ ஒன் இந்தியாவிடம் கூறியதாவது:
75 ஆண்டுகாலமாக விமானத் துறையில் நாம் சாதித்திருப்பதை இந்த கண்காட்சியில் வெளிப்படுத்த இருக்கிறோம். இந்த கண்காட்சியில் மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் அடிப்படையில் விமானம் மற்றும் பாதுகாப்புத் துறைக்கான ஒப்பந்தங்கள் அதிக அளவில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்தியாவிலேயே முழுவதும் தயாரிக்கப்பட்ட அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர் ருத்ரா, நமது சொந்த தயாரிப்பான தேஜா போர் விமானம் போன்றவை நமது திறமையை பறைசாற்றுகிற தூதர்களாக இருக்கும்.

ஒற்றை என்ஜினில் இயங்கக் கூடிய கண்காணிப்பு, மெடிக்கல் ஆம்புலன்ஸ் என பல்வேறு பயன்பாட்டுக்குரிய மிக இலகு ரக ஹெலிகாப்டரும் இக்கண்காட்சியில் இடம்பெற இருக்கிறது. இக்கண்காட்சியில் வான்வெளியில் நமது சாதனை வெளிப்படும்.
இவ்வாறு ஸ்வர்ண ராஜூ கூறினார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக!












Click it and Unblock the Notifications