Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛500 ஆண்டு காத்திருப்பு’.. ராமரை தரிசிக்க நேராக கருவறைக்கு போன அனுமன்! அயோத்தியில் சுவாரசியம்

Subscribe to Oneindia Tamil

அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் முடிந்தது. இந்நிலையில் தான் கும்பாபிஷேக முதல் நாளான நேற்று அயோத்தி ராமர் கோவில் கருவறையில் நடந்த சுவாரசிய சம்பவம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

500 ஆண்டுகால அயோத்தி ராமர் கோவில் பிரச்சனைக்கு 2019ல் முடிவுக்கு வந்தது. உச்சநீதிமன்றம் ராமர் கோவில் கட்டலாம் என தீர்ப்பு வழங்கிய நிலையில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நிறைவு பெற்றுள்ளது.

 Hanuman Entry: Monkey entered Ram Mandirs Sanctum Sanctorum, says Shri Ram Janmbhoomi Teerth Kshetra trust

நேற்று முதல் மக்கள் கோவில் கருவறையில் உள்ள 5 வயது குழந்தை பருவ ராமர் சிலையை தரிசனம் செய்து வருகின்றனர். முன்னதாக கும்பாபிஷேகத்துக்கான சிறப்பு பூஜைகள் கடந்த 16ம் தேதி கோவிலில் தொடங்கியது.

கடந்த 17ம் தேதி அயோத்தி ராமர் கோவிலில் 5 வயது நிரம்பிய பாலகனாக ராமர் சிலை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. 18ம் தேதி வேதமந்திரங்கள் முழங்க கோவிலில் சிலை நிறுவப்பட்டது. அதன்பிறகு நேற்று முன்தினம் கோவிலில் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடந்தது. மதியம் 12.15 மணிக்கு தொடங்கிய பிரான் பிரதிஷ்டை சடங்குகள் 12.45 மணி வரை நடந்தது.

‛‛எனக்கு அந்த பிரசாதம் தான் வேணும்’’.. 11 நாள் விரதம் முடிக்க பிரதமர் மோடி கேட்டது என்ன? சுவாரசியம்

பிரதமர் நரேந்திர மோடி கோவில் கருவறைக்குள் சென்று அர்ச்சகர்களுடன் பால ராமர் சிலைக்கு பிரான் பிரதிஷ்டை செய்தார். பிரான் பிரதிஷ்டை முடிந்த பிறகு பால ராமர் சிலையின் கண்கள் திறக்கப்பட்டது. இன்று 2வது நாளாக பொதுமக்கள் அயோத்தி கோவிலில் ராமரை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் முதல் நாளான நேற்று பொதுமக்கள் வரிசையில் வந்து ராமரை தரிசனம் செய்து திரும்பி கொண்டிருந்தனர்.

இந்த வேளையில் தான் குரங்கு ஒன்று கோவில் கருவறைக்குள் நுழைந்து ராமனை தரிசிக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி ராமர் கோவிலின் அறக்கட்டளையான ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. ஹிந்தி மொழியில் எழுதப்பட்டுள்ள அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

அயோத்தி போல்.. ஞானவாபி மசூதியை இந்துக்களிடம் ஒப்படைக்கனும் - மாஜி தொல்லியல் நிபுணர் கேகே முகமது

‛‛ராமர் கோவிலில் அழகான நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இன்று (அதாவது நேற்று) மாலை 5.50 மணிக்கு கூடா மண்டபத்தின் தெற்கு வாசல் வழியாக குரங்கு ஒன்று நுழைந்து கருவறையில் உற்சவ மூர்த்தி அருகே சென்றது. இதை அங்கிருந்த பாதுகாப்பு காவலர் பார்த்தார். சிலையை கீழே தள்ளிவிடும் என நினைத்து காவலர் வேகமாக சென்றார். இதை கவனித்த குரங்கு மெதுவாக வடக்கு கதவை நோக்கி ஓடியது. கதவு மூடப்பட்டவுடன் கிழக்கு நோக்கி சென்று பக்தர்களுக்கு இடையூறு இன்றி அமைதியாக சென்றது. இதுபற்றி காவலர் பால ராமரை காண அனுமனே வந்திருக்கிறார்’’ என்றார்.

ராமாயணத்தை பொறுத்தமட்டில் ராமன் மற்றும் அனுமனுக்கு மிக நெருக்கமான பந்தம் உள்ளது. ராமனின் தீவிர பக்தனாக அனுமன் இருந்ததாக கூறப்படுகிறது. சீதையை ராவணன் இலங்கையில் சிறை வைத்தபோது ராமனுக்கு உதவியாக இருந்தவர் அனுமன் தான். விஷ்ணுவின் அவதாரமாக ராமர் பூமியில் பிறப்பெடுத்ததாக கூறப்படும் நிலையில் வடஇந்தியாவில் அனுமன் சிவனின் அவதாரம் என கூறப்படுகிறது.

இப்படி ராமன்-அனுமன் இடையேயான பந்தம் உள்ளது. இத்தகைய சூழலில் தான் அயோத்தி ராமர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் முடிந்த அடுத்த நாளே குரங்கு ஒன்று கோவில் கருவறைக்குள் நுழைந்து பால ராமரை காண சென்ற சம்பவம் நெகிழ வைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+