அயோத்தி போல்.. ஞானவாபி மசூதியை இந்துக்களிடம் ஒப்படைக்கனும் - மாஜி தொல்லியல் நிபுணர் கேகே முகமது
அயோத்தி: அயோத்தியை போல் ஞானவாபி மற்றும் ஷாஹி இத்கா நிலத்தை இஸ்லாமியர்கள் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற மண்டல இயக்குநர் கேகே முகமது தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இவரது ஆய்வு என்பது மிகவும் முக்கிய காரணமாக இருந்த நிலையில் தான் கேகே முகமது இப்படி பரபரப்பான தகவலை தெரிவித்து அதன் பின்னணி காரணத்தையும் கூறியுள்ளார்.
அயோத்தியில் 2.7 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக 500 ஆண்டுகள் பிரச்சனை என்பது இருந்து வந்தது. இந்த பிரச்சனைக்கு கடந்த 2019ல் தீர்வு காணப்பட்டது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தான் பிரச்சனைக்கு தீர்வாக அமைந்தது.

அதாவது அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து ராமர் கோவிலுக்கு 2020ல் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது கோவிலில் முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் கும்பாபிேஷகம் நடந்தது.
பிரதமர் மோடி பங்கேற்று கோவில் கருவறையில் நிறுவப்பட்டுள்ள 5 வயது பால ராமர் சிலைக்கு பிரான் பிரதிஷ்டை செய்தார். இதையடுத்து நேற்று முதல் பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர். அயோத்தி ராமர் கோவில் விவகாரம் தொடர்பாக இந்தியாவில் வேறு சில இடங்களிலும் பிரச்சனை என்பது உள்ளது. அயோத்தி ஞானவாபி மசூதி மற்றும் கிருஷ்ண ஜென்ம பூமியான மதுராவில் ஷாஹி இத்கா நிலம் தொடர்பாக பிரச்சனை இருக்கிறது.
இந்நிலையில் தான் இந்திய தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற மண்டல இயக்குனர் கேகே முகமது பரபரப்பான கருத்தை கூறியுள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இவர் அங்கு மேற்கொண்ட ஆய்வு என்பது மிகவும் முக்கிய காரணமாக அமைந்தது. பிபி லால் தலைமையிலான ஆய்வுக்குழுவில் இவர் இடம்பிடித்து இருந்தார். இந்நிலையில் தான் தற்போது அவர் அயோத்திர ராமர் கோவில், ஞானவாபி மசூதி குறித்து பேசியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
பாபர் மசூதி பகுதியில் தோண்டி ஆய்வு செய்தோம். அப்போது சுவர்களில் சிதைக்கப்பட்ட இந்து கடவுள்கள் போன்ற வடிவங்கள் இருந்தன. மேலும் கல்வெட்டில் மகாவிஷ்ணு பற்றியும், 10 தலைகள் கொண்டவனை கொன்றது பற்றியும் தெளிவாக எழுதப்பட்டிருந்தது. இதன் பொருள் என்பது ராமரை குறிக்கிறது. இதன்மூலம் அந்த இடம் யாருடையது என்பது தெளிவாகிறது.
மேலும் தொழில்சார்ந்து தொல்பொருள் ஆய்வாளராக நான் மகிழ்ச்சியடைகிறேன். தற்போது அயோத்தியில் ராமருக்கு கோவில் வந்துள்ளது. தொல்லியல் ஆய்வாளர் இந்து அல்லது முஸ்லிம் அல்ல. ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளராக சரியான ரிசல்ட் வந்துள்ளது. இதனால் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தியாவில் காசி, மதுரா மற்றும் அயோத்தி உள்ளிட்ட இடங்கள் இந்துகளுக்கு சிறப்பு புனிதமான ஒன்றாக உள்ளன. இந்த இடங்கள் முறையே கடவுள் சிவன், கிருஷ்ணா, ராமர் ஆகியோரின் வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டவை. இங்கு மசூதிகள் இருப்பதன் மூலம் முஸ்லிம்களுக்கு எந்த வகையான உணர்வும் கிடைக்கப்போவது இல்லை. இதனால் அயோத்தி போல் ஞானவாபி, ஷாஹி கட்டட அமைப்புகளை இந்துக்களிடம் வழங்க வேண்டும்" என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications