ரூபாய் நோட்டு விவகாரம் பற்றி சேவாக் விளாசிய சிக்சர்!
டெல்லி: இந்திய ராணுவ வீரர் 6 நாட்கள் பனி பாறைக்கு கீழே உயிரை பிடித்துக்கொண்டு இருக்க முடியும்போது, ரூபாய் நோட்டு இன்றி நம்மால் வாழ முடியாதா என கேட்டுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்.

ராணுவ வீரர் ஹனுமந்தப்பா, 6 நாட்கள் 35 அடி பனி பாறைகளின் கீழே மைனஸ் 45 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் சிக்கியிருந்து உயிரோடு மீட்கப்பட்டார். அதேபோல நமது நாட்டுக்காக சில மணி நேரம் நாமும் கியூவில் நிற்க முடியும். இவ்வாறு சேவாக் டிவிட் செய்துள்ளார்.
Shaheed Hanumanthappa waited 6days,35ft under snow,in-45°C,in hope of being rescued.
— Virender Sehwag (@virendersehwag) November 14, 2016
Surely,we can wait few hrs in line to rescue Our Nation pic.twitter.com/TKvpsZ3KCH
மோடி அரசின் ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு சேவாக் முதல் நாளே வரவேற்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவரது டிவிட்டுக்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்துள்ளது.
இதுவரை சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ரீ டிவிட் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications