போலீசாரை கொலை செய்ய தூண்டும் பேச்சு.... ஹர்திக் படேல் மீது பாய்ந்தது தேச துரோக வழக்கு
அகமதாபாத்: போலீசாரை படுகொலை செய்யுங்கள் என பேசிய குஜராத் படேல் சமூகத் தலைவர் ஹர்திக் படேல் மீது இன்று தேச துரோக வழக்கு பாய்ந்துள்ளது.
குஜராத்தில் முற்பட்ட வகுப்பினராகிய படேல் சமூகத்தினரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும்; இல்லை எனில் இடஒதுக்கீடு முறையையே ஒழித்துகட்ட வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து வருகிறவர் ஹர்திக் படேல்.

கடந்த சில மாதங்களாக ஹர்திக் படேல் தமது போராட்டத்தை தீவிரமாக நடத்தி வருகிறார். இதனால் படேல் சமூக போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
இக்கைது நடவடிக்கையை கண்டித்து அக்டோபர் 3-ந் தேதியன்று படேல் சமூகத்தினரிடம் பேசிய ஹர்திக், இடஒதுக்கீடு கோரிக்கைக்காக எவரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம்; நீங்கள் உயிரை மாய்த்துக் கொள்வதற்கு பதிலாக ஒடுக்குமுறையை ஏவிவிடும் போலீசாரை படுகொலை செய்யுங்கள் என்று பேசியிருந்தார்.
ஹர்திக் படேலின் இப்பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ராஜ்கோட்டில் இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையேயான 3வது ஒருநாள் போட்டியை நேற்று தடுக்கும் வகையில் ஹர்திக் படேல் பேரணியாக செல்ல முயன்றார்.
ஆனால் அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். முன்னதாக கைது நடவடிக்கையில் இருந்து தப்பி செய்தியாளர்களிடம் ஹர்திக் பேச முயற்சித்தார். அப்போது தேசியக் கொடியை காலில் போட்டு மிதித்தபடி ஹர்திக் நின்று கொண்டிருந்தார். இதனால் தேசியக் கொடியை அவமதித்ததாகவும் ஒரு வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் "போலீசாரை படுகொலை செய்ய வேண்டும்" என்ற பேச்சுக்காக இன்று தேசத்துரோக வழக்கும் ஹர்திக் படேல் மீது பாய்ந்துள்ளது. இதனால் ஹர்திக் படேல் அவ்வளவு எளிதாக வெளியே வந்துவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications