ஹரித்துவாரில் மீண்டும் திருவள்ளூவர் சிலை திறப்பு !

தமிழ் அமைப்புகளின் முயற்சியால் ஹரித்துவாரில் மீண்டும் திருவள்ளூவர் சிலை நேற்று மாலை நிறுவப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

ஹரித்துவார்: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் மீண்டும் திருவள்ளூவர் சிலை நேற்று மாலை நிறுவப்பட்டது. முதல்வர் ஹரீஷ்ராவத் சிலையை திறந்து வைத்தார்

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கை கரையில் 12 அடி திருவள்ளுவர் சிலையை நிறுவ பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் முயற்சி செய்தார். இதற்காக தமிழகத்தின் நாமக்கல்லில் திருவள்ளுவர் உருவச் சிலை வடிவமைக்கப்பட்டது. ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட இந்தச் சிலைக்கு கொல்லிமலை அடிவாரத்தில் 10.50 டன் எடையில் கல் எடுக்கப்பட்டு. 20 சிற்பக் கலைஞர்கள் தொடர்ந்து 35 நாள்கள் பணியாற்றி சிலையை உருவாக்கினர்.

Harish Rawat unveiled the statue of renowned Tamil poet Thiruvalluvar

இதையடுத்து தமிழகத்தில் இருந்து திருவள்ளுவர் சிலை கடந்த ஜூன் மாதம் ரயில் மூலம் ஹரித்துவார் கொண்டு செல்லப்பட்டு நிறுவப்பட்டது. ஆனால், சாதுக்களின் கடும் எதிர்ப்பால், பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை தற்காலிகமாக நிறுவப்பட்டது. ஆனால், தற்போது அங்குள்ள பூங்கா ஒன்றில் கறுப்பு நிற கவரால் சுற்றி, கட்டப்பட்ட நிலையில், கேட்பாரற்று கிடந்தது.

தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகள், இதை திருவள்ளுவருக்கு நேர்ந்த அவமானமாக கருதி கண்டித்து குரல் எழுப்பின. இதையடுத்து சிலையை மீண்டும் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு உதவி செய்வதாக உத்தரகாண்ட் மாநில முதல்வர் ஹரீஷ் ராவத், தமிழ் அமைப்புகளிடம் உறுதியளித்தார்.

இதன்படி, ஹரித்துவாரில் உள்ள மேளா பவன் வளாகத்தில் நேற்று மாலை திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில் முதல்வர் ஹரீஷ் ராவத் சிலையை திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ஏராளமான தமிழ் அமைப்பினர் பங்கேற்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+