வதேரா நிலக்கொள்ளையை அம்பலப்படுத்திய அசோக் கேம்காவுக்கு எதிராக சிபிஐ விசாரணை
சண்டிகர்: காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேராவின் நிலக் கொள்ளையை அம்பலப்படுத்திய ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கேம்காவுக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்த ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது.
சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா, விவசாயிகளிடம் இருந்து முறைகேடகா குறைவான விலைக்கு விளைநிலத்தை வாங்கி தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு கூடுதல் விலைக்கு வற்று கோடிக்கணக்கில் லாபம் அடைந்தார் என்பதை அம்பலப்படுத்தியவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கேம்கா.

இதுபோல் ஊழல்களை அம்பலபடுத்தியதால் ஹரியானா மாநில அரசு பல துறைகளுக்கும் மாற்றிப் பார்த்தது. ஆனாலும் கேம்கா ஓயவில்லை.
இந்நிலையில் குஜராத்தில் தனியார் நிறுவனத்திற்கு கான்ட்ராக் பெற்றுத் தருவதாகக் கூறி அசோக் கேம்கா ரூ.8 கோடி லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, அதனை சிபிஐ விசாரிக்க ஹரியானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications