சர்ச்சை பேச்சு: சல்மான்கானிடம் ரூ.10 கோடி நஷ்ட ஈடுகேட்டு பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் நோட்டீஸ்
சண்டீகர்: ஹிந்தி நடிகர் சல்மான்கானிடம் பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடுகேட்டு பலாத்காரத்தால் பாதிக்கப்ட்ட பெண் ஒருவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சமீபத்தில் தான் நடித்திருக்கும் சுல்தான் படம் குறித்து சல்மான் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் ''மல்யுத்த வீரராக நடிக்க மிகவும் கஷ்டப்பட்டேன். தினமும் மல்யுத்தக் காட்சிகளில் நடித்து வீடு திரும்பும்போது நேராக நடக்க முடியாமல் அவதிப்படுகிறேன்.

இதனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணைப்போல உணர்கிறேன்'' என்று கூறியிருந்தார். இவரது பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. சல்மான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பெண்கள் அமைப்பினர் போர்க்கொடி உயர்த்தினர்.
இந்த நிலையில் ஹிரியாணா மாநிலம் மாநிலத்தைச் சேர்ந்த ரேஷ்மா என்பவர் தனது வழக்கறிஞர் மூலம் சல்மான்கானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், பலாத்காரத்துக்கு உள்ளான தனக்கு சல்மான்கானின் கருத்து மேலும் பாதிப்பை உருவாக்கியுள்ளதாகவும், இதனால் பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ரேஷ்மா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 10 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். இதையடுத்து ரேஷ்மாவின் தந்தை தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கக் கோரி அவர் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் சுல்தான் படத்தின் படப்பிடிப்பின்போது பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணாக தான் உணர்ந்ததாக சல்மான்கான் கூறியிருந்தார். இதற்காக அந்தப் பெண் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஏற்கனவே, மகாராஷ்டிர மகளிர் ஆணையம் நேரில் ஆஜராகுமாறு சல்மான்கானுக்கு சம்மன் அனுப்பியிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications