மேடையில் விளாசினாலும் லோக்சபாவில் கேள்வியே கேட்காத ராகுல்
டெல்லி: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி மேடைகளில் பேசினாலும் லோக்சபாவில் இருப்பதிலேயே குறைந்த அளவு கேள்விகள் கேட்ட உறுப்பினராக உள்ளார்.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி 56 நாட்கள் விடுப்பில் சென்றுவிட்டு வந்ததில் இருந்து அவரிடம் ஏகப்பட்ட மாற்றங்கள். மேடைகளில் மிகவும் தெளிவாக பேசுகிறார். பிரதமர் மோடியை கண்டமேனிக்கு விமர்சனம் செய்கிறார். அவர் மோடியை விமர்சிக்கும் விதம் பற்றி தான் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

மேடைப் பேச்சோடு நின்றுவிடாமல் விவசாயிகளுக்காக போராட்டம் நடத்தினார், பாதயாத்திரை செல்கிறார். தினமும் செய்தித்தாளை எடுத்தால் ராகுல் காந்தி அதை செய்தார், இதை செய்தார், அப்படி பேசினார், இப்படி பேசினார் என்று ஏதாவது செய்தி வந்து கொண்டிருக்கிறது.
மோடிக்கு போட்டியாக ராகுலும் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பழையபடியே உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
கடந்த லோக்சபா தொடரில் எம்.பி.க்கள் சராசரியாக 85 நாட்கள் நாடாளுமன்றத்துக்கு வந்துள்ளனர். ஆனால் ராகுலோ 50 சதவீதத்தை விட கொஞ்சம் அதிகமாக அட்டெண்டன்ஸ் வைத்துள்ளார்.
நாடாளுமன்ற விவாதங்களில் அவர் வெறும் 6 முறை தான் கலந்து கொண்டு பேசியுள்ளார். அதிலும் கடந்த ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களில் தான் 5 முறை அவர் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications