7வது நாள் உண்ணாவிரதம்: ஹசாரே 4கி எடை குறைந்துள்ளதாக மருத்துவர்கள் கவலை

காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே வலுவான லோக்பால் மசோதா வேண்டி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். இதற்கு முன்னர் அவரது உண்ணாவிரதப் போராட்டங்கள் அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகளின் வாக்குறுதிகளின் அடிப்படையில் திரும்பப் பெற்றுக் கொள்ளப் பட்டது. ஆனால், இம்முறை தனது நோக்கம் நிறைவேறும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர இருப்பதாக உறுதிமொழியுடன், தனது சொந்த ஊரான மராட்டிய மாநிலம் ராலேகான் சித்தி பகுதியில் உள்ள யாதவ் பாபா கோவிலில் கடந்த 10-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார் ஹசாரே.
அதனைத் தொடர்ந்து, மத்திய அரசு மக்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றியது. ஆனால் இந்த மசோதா மாநிலங்களவையில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இன்று (திங்கட்கிழமை) நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மறைந்த மத்திய அமைச்சர் சிஸ்ராம் ஓலேக்கு இரங்கல் தெரிவித்து இன்றைய கூட்டம் நிறைவு பெற்று விடும். எனவே, நாளை இந்த மசோதா நிறைவேற்றப் படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்நிலையில், இன்று 7வது நாளாக தனது உண்ணாவிரதத்தை தொடரும் ஹசாரேவின் உடல்நிலையை நேற்று மருத்துவர்கள் பரிசோதித்தனர். தீவிர பரிசோதனைக்குப் பிறகு, ஹசாரேயின் உடல் எடை உண்ணாவிரதம் தொடங்கியதில் இருந்து 4 கிலோ குறைந்துள்ளதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications