திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு கோரிய மனு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: திருப்பதிக்கு பேருந்தில் செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தெலுங்கானா பிரச்னை காரணமாக பதற்றம் நீடிப்பதால், தமிழ்நாட்டில் இருந்து திருப்பதிக்கு பேருந்தில் செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வரம்புக்கு உட்பட்டதல்ல எனக் கூறிய நீதிபதி, அம்மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனிடையே தமிழக வாகனங்களுக்கு ஆந்திர எல்லையான சித்தூர் வரை பாதுகாப்பு வழங்கப்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications