மும்பையில் கன மழை.. பஸ், ரயில் விமான போக்குவரத்தில் பாதிப்பு! தயார் நிலையில் மீட்பு படை
மும்பை: மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் கொட்டி வரும் கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது; பஸ், ரயில், விமான போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விடாமல் கொட்டிவரும் மழையால் இன்று காலை முதலே மும்பையின் முக்கிய சாலைகளில் டிராபிக் நெரிசலால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். டிராபிக் நெரிசலில் ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் மற்றும் வெஸ்டர்ன் எஸ்பிரஸ் சாலைகள் விழி பிதுங்கின.
If you think #mumbairains are bad, Just remember it rains Spiders in Jamaica.#truestory pic.twitter.com/9aTMLrv8ks
— Mrs. Tony Stark :D (@BrushUrTeeth_03) August 5, 2016
புறநகர் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. ரயில்கள் சுமார் அரை மணி நேரம் வரை தாமதமாக இயங்கின. சியோன்-குர்லா மார்க்கத்தில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் 30 நிமிட தாமதத்துடன் இயக்கப்பட்டன. இதுவரை எந்த விமானமும் மாற்றியோ, அல்லது ரத்தோ செய்யப்படவில்லை.
தானே, பால்கார், ராய்க்காட் உள்ளிட்ட மும்பையின் அண்டை மாவட்டங்களிலும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்னும் 2 நாட்களுக்கு கன மழை தொடரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
எனவே, காவல்துறை, தீயணைப்பு துறை, பேரிடர் மீட்பு படையினர், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications