For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த மழை: இருளில் மூழ்கிய பெங்களூர்

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: திங்கட்கிழமை மாலை பெங்களூரில் திடீர் என்று கன மழை பெய்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் திங்கட்கிழமை மாலை 6.30 மணி அளவில் திடீர் என்று வானம் இருண்டு பலத்த காற்று வீசியது. வானத்தில் நடந்த மாற்றத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே இருள் சூழ்ந்தது.

இதையடுத்து கனமழை பெய்தது.

இருள்

இருள்

மாலை 6.30 மணிக்கு வானம் இருண்டதால் கும்மிருட்டானது. இதையடுத்து மின்வெட்டு ஏற்பட்டது. இருளால் வாகன ஓட்டிகள் மற்றும் சாலைகளில் நடந்து சென்றவர்கள் அவதிப்பட்டனர்.

கனமழை

கனமழை

வானம் இருண்ட வேகத்தில் கன மழை பெய்தது. மேலும் மழையுடன் இடி, மின்னலும் சேர்ந்து கொண்டது.

போக்குவரத்து

போக்குவரத்து

போக்குவரத்து நெரிசலுக்கு பெயர்போன பெங்களூரில் கனமழை, பலத்த காற்றால் நகரின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மரங்கள்

மரங்கள்

பெங்களூரில் வீசிய பலத்த காற்றால் சில இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இந்த திடீர் மழையால் சில இடங்களில் விடிய, விடிய மின்வெட்டு நிலவியதால் மக்கள் அவதிப்பட்டனர். இரண்டு மணிநேரத்தில் 20 முதல் 30 மிமீ அளவுக்கு மழை பெய்துள்ளது.

English summary
Heavy rains lashed Bangalore late on Monday evening, throwing normal life out of gear and causing huge traffic jams across the city due to evening rush hour and congestion on many arterial roads.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X