ஓகி புயலால் சென்னை, லட்சதீவில் பலத்த காற்று வீசும்.. மழை பெய்யும்.. இந்திய வானிலை மையம்!
ஓகி புயலின் தாக்கத்தால் சென்னை மற்றும் லட்சத்தீவில் பலத்த மற்றும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை அமையம் தெரிவித்துள்ளது.
டெல்லி: ஓகி புயலின் தாக்கத்தால் சென்னை மற்றும் லட்சத்தீவில் பலத்த மற்றும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை அமையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ஓகி என வங்கதேசம் பெயரிட்டுள்ளது.
இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது. பலத்த மழையும் பெய்து வருவதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

80 கி.மீ தொலைவில் ஓகி
காலையில் கன்னியாகுமரியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த புயல் பிற்பகலுக்குப் பிறகு கன்னியாகுமரியை விட்டு விலகத் தொடங்கியுள்ளது. தற்போது கன்னியாகுமரியில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் இந்த புயல் மையம் கொண்டுள்ளது.

லட்சத்தீவுக்கு எச்சரிக்கை
ஓகி புயல் லட்சதீவை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் லட்சத்தீவுக்கு இந்திய வானிலை மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

48 மணிநேரத்திற்கு கனமழை
ஓகி புயலால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையிலும் காற்று வீசும்
ஓகி புயலின் தாக்கத்தால் சென்னையிலும் காற்று வீசும் என்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சதீவு மீனவர்கள் அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications